இன்றைய பலன்:
முக்கியமற்ற விவகாரங்கள் குறித்து கவலை வேண்டாம். இன்று நல்லவர்கள் துணை நிற்பர். ஆதாயங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
நிறம்: நீலம், வெண்மை
வாரப் பலன்:
அன்புள்ள ரிஷப ராசிக்காரர்களே,
மாதக் கோள்களான புதன், சுக்கிரன், சூரியன் ஆகியோரின் அமைப்புகள் சிறப்பானவை. செவ்வாயின் இடமாற்றம் சாதகமாக அமையும். சந்திரன், சனியருள் கிட்டும். குரு, ராகு, கேதுவின் பலம் கெடும்.
போட்டி என்று வந்துவிட்டால் சிங்கம்போல் சீறிப் பாயக் கூடியவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் உங்கள் எண்ணம் போல் சில விஷயங்கள் நடந்தேறும் வாய்ப்புண்டு. விலகிச் சென்றவர்கள் தேடி வருவர். உடன் இருந்து குழி பறித்தவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கி வைப்பீர்கள். உங்களது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த அம்சங்கள் தற்போது ஒவ்வொன்றாக விலகிடும். மனத்தில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். நம்மால் எதையும் சாதித்திட இயலும் எனும் உத்வேகத்துடன் வலம் வருவீர்கள். அடுத்து வரும் நாட்களில் உடல்நலம் சிறப்பாக இருக்கும். கடந்த காலத்து உபாதைகள், மனக்குழப்பங்கள் மறைந்து போகும். குருபலம் இல்லை என்றாலும் சனியருளால் வரவுகள் திருப்திகரமாகவே இருக்கும். ஈடுபடும் காரியங்களில் திடீர் தடைகள் முளைக்கலாம். அனைத்தையும் முறியடித்து காரிய வெற்றி காண்பீர்கள். அவசரமான பணிகளுக்காக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்திடும். வியாபார ரீதியில் ஓரளவு வளர்ச்சி உண்டாகும். வார இறுதியில் நீண்ட நாள் முயற்சி ஒன்று வெற்றி பெறும் வாய்ப்புண்டு. இச்சமயம் திடீர் ஆதாயங்கள் கிடைக்கலாம்.
இல்லறச் சக்கரம் இனிதே சுழலும். மனைவி, மக்கள் ஆதரவுண்டு.
அனுகூலமான நாள்கள்: பிப்ரவரி 15, 17
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9