இன்றைய பலன்:
தேவை இல்லாமல் யாருடனும் மோதத் தேவையில்லை. இன்று தடைகளை மீறி முக்கியப் பணிகளை முடிப்பீர்கள். ஆதாயங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
வாரப் பலன்:
அன்புள்ள மகர ராசிக்காரர்களே,
இவ்வாரம் சனிபகவானின் அருளைப் பெறுவீர்கள். புதன், சுக்கிரனால் நலமுண்டு. குரு, ராகு, கேது, சூரியனின் ஆதரவு இல்லை. செவ்வாயின் இடமாற்றம் சாதகமாக அமையாது.
கடினமான பொறுப்புகளையும் கச்சிதமாக நிறைவேற்றக் கூடிய திறமைசாலிகள் நீங்கள். அடுத்து வரும் நாள்களில் உங்களுக்குரிய பொறுப்புகள் வழக்கத்தை விட சற்றே அதிகமாக இருக்கலாம். திடீர் காரியத் தடைகளும் முளைக்கக் கூடும். எனினும் அவை அனைத்தையும் சுலபத்தில் கடந்து குறித்த நேரத்தில் பல பொறுப்புகளை நிறைவேற்றி அவற்றுக்குரிய ஆதாயங்களையும் உடனுக்குடன் அறுவடை செய்வீர்கள். இதற்கு உங்கள் நலன்விரும்பிகள் தேவையான உதவிகளைச் செய்து துணை நிற்பர். உங்களுக்குரிய வரவுகள் ஒரே சீராக இருக்காது. எதிர்பார்த்த தொகைகள் குறித்த நேரத்தில் கிடைக்காமல் தடைபடலாம். செலவுகளின் பட்டியல் நீளும். அவற்றை சுருக்குவது உங்கள் சாமர்த்தியம். இச்சமயம் உபரி வருமானம் ஈட்டும் முயற்சியை தீவிரப்படுத்துங்கள். பண விவகாரங்களில் அலட்சியம் கூடாது. நெருக்கமானவர் என்றாலும் தகுந்த ஆவணங்கள் இன்றி பணப்பரிமாற்றத்தில் ஈடுபட வேண்டாம். புதிய மங்கலப் பேச்சு, சொத்துகள் தொடர்பிலான முயற்சிகளில் நிதானம் தேவை. பணியாளர்கள் சிறப்புச் சலுகைகளைப் பெறுவர். வியாபாரிகள் அகலக்கால் வைக்கும் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வார இறுதியில் உங்களில் ஒரு சிலரது உடல்நலம் லேசாகப் பாதிக்க வாய்ப்புள்ளது. இச்சமயம் வீண் அலைச்சலைத் தவிர்த்திடுங்கள்.
குடும்பத்தில் சிறு குறையும் இருக்காது. பெற்றோர் ஆதரவு பலம்சேர்க்கும்.
அனுகூலமான நாள்கள்: பிப்ரவரி 15, 16
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3