அரசாங்கம் எந்தவொரு சமய நடவடிக்கையையும் தடுத்ததோ கட்டுப்படுத்தியதோ இல்லை என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

சட்டத்திற்கு உட்பட்டே வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட வேண்டும்: அன்வார்

Worldless than 20 seconds ago

https://www.malaymail.com/news/malaysia/2026/02/19/anwar-no-one-above-the-law-in-building-houses-of-worship/209618

புத்ராஜெயா: மலேசியாவில் சட்டத்திற்கு உட்பட்டே வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.

அனைத்துச் சமய நடவடிக்கைகளும் நாட்டில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்றும் அவர் சொன்னார்.

அரசாங்கம் எந்தவொரு சமய நடவடிக்கையையும் தடுத்ததோ கட்டுப்படுத்தியதோ இல்லை என்பதைத் திரு அன்வார் சுட்டினார். இருப்பினும் அத்தகைய...

கடந்த ஆண்டு (2025) டிசம்பரில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலிருந்து வெளியேறிய பின்னர், ஆண்ட்ரூஸ் கூட்டுப் படைத்தளத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசியபோது எடுக்கப்பட்ட படம்.

சிரியாவிலிருந்து படையினரை மீட்க அமெரிக்கா முடிவு

Worldabout 1 hour ago

வா‌ஷிங்டன்: அமெரிக்கா, அடுத்த சில மாதங்களில் சிரியாவிலிருந்து எஞ்சிய படையினரை மீட்க ஆயத்தமாகிவருகிறது.

வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசி ஊடகத்திடம் அதனைத் தெரிவித்தார்.

சிரியாவின் அரசாங்கம், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தைத் தங்கள் எல்லைக்குள் வைத்திருக்க ஒப்புக்கொண்டதாக அதிகாரி கூறினார். அத்துடன் அமெரிக்கப் படையினரின் உதவி இனியும் தேவையில்லை என்று டமாஸ்கஸ் சொன்னதாகவும் அவர்...

வருவாயைப் பெருக்குவதற்குப் புனித ரமலான் மாதம் காலமன்று என்று பங்ளாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் கூறினார்.

உணவு, தேவையான பொருள்களின் விலையை நிலைப்படுத்த பங்ளாதேஷ் பிரதமர் உறுதி

Worldabout 2 hours ago

டாக்கா: முஸ்லிம்களுக்குப் புனிதமான ரமலான் மாதத்தில் பங்ளாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான், விலைகளை நிலைப்படுத்த உறுதி கூறியுள்ளார்.

அத்துடன், சட்டத்தை மீண்டும் நிலைநாட்டப்போவதாகவும் பொருளியல், உள்கட்டமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவிருப்பதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி பலமான வெற்றியைப் பெற்றதை அடுத்து, பிரதமர் தாரிக் இந்த வாக்குறுதிகளைக் கூறி வருகிறார்.

முன்னாள்ப் பிரதமர்...

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் செல்லும் முன்னர், கிட்டத்தட்ட 100 பேர் தீப்பற்றிய வீடு அமைந்துள்ள புளோக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 

கோவன் கூட்டுரிமை வீட்டில் தீ; மூவர் மருத்துவமனையில்

Singapore15 minutes ago

கோவன் வட்டாரத்தில் உள்ள கூட்டுரிமை வீட்டில் தீ மூண்டதைத் தொடர்ந்து மூவர் மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கிருந்து மீட்கப்பட்ட ஆறு பேரில் அவர்களும் அடங்குவர்.

சம்பவம் வியாழக்கிழமை (பிப்ரவரி 19) அதிகாலை நடந்தது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, பின்னிரவு 2.30 மணியளவில் எண் 6, கோவன் ரைசில் தீ மூண்டது குறித்துத் தகவல் கிடைத்ததாக ஃபேஸ்புக்கில்...

முரசு மேடை

கலிஃபோர்னியாவின் சியெரா மலையில் சிக்கியிருக்கும் பனிச்சறுக்கு வீரர்களைத் தேடிக் கண்டுபிடிக்க மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) சென்றனர்.

கலிஃபோர்னியாவில் பனிச்சரிவு; 8 பேர் மரணம்

World14 minutes ago

லாஸ் ஏஞ்சலிஸ்: கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் காணாமற்போன 9 பனிச்சறுக்கு வீரர்களில் 8 பேர் மாண்டுவிட்டனர்.

எஞ்சிய ஒருவர் கடும் பனிப்புயலில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. காவல்துறை புதன்கிழமை (பிப்ரவரி 18) அந்தத் தகவலை வெளியிட்டது.

செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து மீட்புப் பணியாளர்கள், தாஹோ வட்டாரத்தில் கேசல் பீக் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியோரைத் தேடப் பெரு...

லிட்டில் இந்தியா கடையில் தீ விபத்து; ஊழியர்கள் தப்பினர்
Play Video

20பிப்ரவரி 16, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

சிங்கப்பூரின் நல்லிணக்கத்தை முனைப்புடன் புதுப்பிப்பது அவசியம்
Play Video

அண்டை வீடுகளுக்குத் தீ வைத்து, கொலை மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 5 ஆண்டுச் சிறை
Play Video

பிப்ரவரி 13, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video