மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு: ஜெய்சங்கர்

மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு: ஜெய்சங்கர்

1 mins read
5e397b1e-2892-41ef-8a0b-477dd72268c1
அமைச்சர் ஜெய்சங்கர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

மாஸ்கோ: அண்மைய ஆண்டுகளில் பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகவும் மோசமடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு அறவே சகிப்புத்தன்மை காட்டக்கூடாது என்று செவ்வாய்க்கிழமை ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக தனது மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு என்றும் இந்தியா நிச்சயமாக அதைச் செயல்படுத்தும் என்றும் புதுடெல்லியின் கருத்தை அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாத அச்சுறுத்தல்களை நியாயப்படுத்தவோ, விலக்கிப் பார்க்கவோ முடியாது என்றார் திரு ஜெய்சங்கர்.

“பருவநிலை மாற்றம், தொற்றுநோய்கள், மோதல்களை எதிர்கொண்ட ஒரு காலகட்டத்தில் மனிதாபிமான ஒத்துழைப்பு மிக முக்கியமானது. ஒரு நாகரிக நாடாக, எந்தவொரு உண்மையான உறவிலும் மக்களுக்கு இடையேயான நல்ல பரிமாற்றங்கள் உள்ளதாக இந்தியா உறுதியாக நம்புகிறது.

“தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரியப் பாதுகாப்பில் அதன் கணிசமான அனுபவத்தை மத்திய ஆசியாவிற்கு விரிவுபடுத்த இந்தியா தயாராக உள்ளது,” என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

மாறிவரும் உலகளாவிய நிலப்பரப்புக்கு ஏற்ப ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றும் விரிவாக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
ஜெய்சங்கர்பயங்கரவாதம்மாஸ்கோஷாங்காய்ஒத்துழைப்புமாநாடு