தென்னாப்பிரிக்க அதிபரைச் சந்தித்த மோடி

தென்னாப்பிரிக்க அதிபரைச் சந்தித்த மோடி

1 mins read
5bba21c2-e7a2-45b0-ac55-5a62d46b01ce
தென்னாப்பிரிக்க அதிபருடன் இந்தியப் பிரதமர் மோடி. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

ஜோகன்னஸ்பர்க்: பிரிக்ஸ் அமைப்பின் 15வது உச்சநிலை மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் .செவ்வாய்க்கிழமையன்று தொடங்கியது. இந்த மாநாட்டில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவில் அந்நாட்டு அதிபர் சிறில் ரமாபோசாவை புதன்கிழமையன்று சந்தித்துப் பேசினார். இதன்பின்னர் இருதரப்பு கூட்டம் ஒன்றும் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்தியத் தரப்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் கலந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்