எல்லையில் பாகிஸ்தான் படையினருடன் ஆப்கான் போலிசார் கடும் சண்டை

எல்லையில் பாகிஸ்தான் படையினருடன் ஆப்கான் போலிசார் கடும் சண்டை

1 mins read
b123d23a-841d-4040-bd72-820d0f0ae2f1
-
Google News Preferred Icon

ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக நீடிக்கும் அந்த சண்டையில் ஆப்கான் எல்லைப் போலிஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் ஐந்து போலிஸ்காரர்கள் காயம் அடைந்ததாகவும் ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லையில் ஆப்கான் படையினரும் பாகிஸ்தான் படையினரும் கூடுதல் ராணுவ வீரர்களை குவித்துள்ளனர். அத்துடன் கன ரக வாகனங்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது. படம்: ஏஎஃப்பி