ஜோ லோ ரகசிய சந்திப்பு புகார்: மலேசியக் காவல்துறை விசாரணை

ஜோ லோ ரகசிய சந்திப்பு புகார்: மலேசியக் காவல்துறை விசாரணை

1 mins read
6b806c14-2796-4d27-b1ee-27be8577980c
1எம்டிபி தொடர்பான கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்து சீனாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே நடக்கும் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஜோ லோ முக்கியப் பங்கு வகிப்பதாகப் பேச்சு எழுந்துள்ளது. - படம்: சைனா பிரஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: தேடப்படும் குற்றவாளியான ஜோ லோ என்றழைக்கப்படும் ஜோ தேக் ஜோ, மலேசியாவுக்குத் திரும்பி ரகசியச் சந்திப்புகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து மலேசியக் காவல்துறை விசாரணை நடத்த இருக்கிறது.

இது குறித்து சனிக்கிழமையன்று (மே 16) செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை தலைமை இயக்குநர் முகம்மது காலித் இஸ்மாயில், ஜோ லோ மலேசியாவுக்கு வந்ததாகக் கூறப்படும் தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.

“இந்தத் தகவல்கள் உண்மையா இல்லையா என்பதை நாங்கள் இன்னும் சரிபார்க்கவில்லை. இது குறித்து மேல்விசாரணை நடத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

ஜனவரி மாதம் அமெரிக்க அதிபரிடம் ஜோ லோ மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகச் செய்தி வெளியானது. 1எம்டிபி தொடர்பான கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்து சீனாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே நடக்கும் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஜோ லோ முக்கியப் பங்கு வகிப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சீனக் குழுவின் பாதுகாப்புடன் கோலாலம்பூரில் இந்த ரகசியச் சந்திப்புகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. 1எம்டிபி ஊழல் முறைகேட்டில் ஜோ லோ மிக முக்கியமான நபராகக் கருதப்படுகிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்