இந்த ஆண்டு வெப்பம் தொடர்பான 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன: ஸுல்கிஃப்லி

இந்த ஆண்டு வெப்பம் தொடர்பான 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன: ஸுல்கிஃப்லி

2 mins read
a4a7e93f-d66a-4f98-aa59-627c6cd70454
அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

புத்ராஜெயா: இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 15 வெப்பம் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் மூன்று வெப்பத் தாக்குதல் சம்பவங்கள் மற்றும் வாகனத்தில் விடப்பட்ட ஒரு குழந்தையின் மரணம் ஆகியவை அடங்கும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அஹமது கூறினார்.

திங்கட்கிழமை (மார்ச் 23) தமது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அவர், தற்போதைய கடுமையான வெப்பம், நீடித்த தலைச்சுற்றல், அசாதாரண தாகம், உடல் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற வெப்பத்தாக்குதலின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்காணிப்பது உட்பட அனைவரும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த அறிகுறிகள் தோன்றினால், நிழலைத் தேடுவது, சுத்தமான தண்ணீரை அதிகம் குடிப்பது, உடலை உடனடியாகக் குளிர்விப்பது போன்ற உடனடித் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். குழந்தைகளையோ வேறு யாரையுமோ வாகனங்களில் ஒரு நிமிடம்கூட கவனிக்காமல் விட்டுச்செல்ல வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.

அவரைப் பொறுத்தவரை, கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள், முதியவர்கள், நாட்பட்ட நோயாளிகள், வெப்பமான பருவநிலையில் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் ஆகியோர் வெப்பத்தாக்குதல் ஆபத்து ஏற்படும் பிரிவினரில் அடங்குவர்.

கெடாவில் உள்ள பாடாங் தெராப்பில் வெப்பமான பருவநிலை இரண்டாம் நிலையை அடைந்துள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அண்மை தினசரி வெப்ப வானிலை நிலவரத்தை அறிய, பொதுமக்கள் https://www.met.gov.my/iklim/status-cuaca-panas/ என்ற இணையத்தளத்தைப் பார்க்கலாம் என்று தமிழ் மலர் செய்தி கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்