கிறிஸ்மஸ் தினத்தன்று காலை 5.30 மணியளவில் தெம்பனிஸ் அவென்யூ 4ல் தண்ணீர்க் குழாய் வெடித்ததில், மூன்று மீட்டர் வரை தண்ணீர் பீய்ச்சி அடித்தது. குழாய் நீர் சாலையோரத்தில் வெளியேறிய காரணத்தால் பிடோக் ரிசர்வாயர் சாலையை நோக்கிச் செல்லும் சாலை, சுன்யுவான் தொடக்கப் பள்ளி அருகே இரண்டு தடச் சாலையின் ஒரு தடம் மட்டுமே பயன்பாட்டிற்கு செயல்பட முடிந் தது. தண்ணீர் உணர்கருவி செயல் முறை மூலம் தண்ணீர்க் குழாய் உடைந்து நீர் கசிவு ஏற்பட்டது காலை 5.30 மணியளவில் அறியப் பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு ஊழியர்களை அனுப்பி வைத்ததாக பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தெம்பனிஸ் தண்ணீர்க் குழாய் வெடிப்பு சீர்செய்யப்பட்டது
1 mins read
-

