இந்தியாவிலிருந்து வந்த 5,000 அரிசி மூட்டைகள் பறிமுதல்

இந்தியாவிலிருந்து வந்த 5,000 அரிசி மூட்டைகள் பறிமுதல்

1 mins read
6a39c7a3-04b9-4001-8789-9806a469dc48
-
Google News Preferred Icon

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கப்பலில் வந்த சுமார் 129 டன் எடையுள்ள 5,000 அரிசி மூட்டை களை பாசிர் பாஞ்சாங் முனையத் தில் சிங்கப்பூர் சுங்கத்துறை, கைப்பற்றியது. அந்தச் சரக்கு சிங்கப்பூரில் பதியப்பட்ட வர்த்தக அடையாளச் சின்னம் ஒன்றைப் பயன்படுத்தி உள்ள கள்ளச் சரக்கு என்று சந் தேகிக்கப்படுவதாக இந்தத் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

அரிசி மூட்டைகளில் காணப் பட்ட வர்த்தக அடையாளச் சின் னத்துக்கு உரிமையாளரான சிங்கப்பூரர் ஒருவர் சுங்கத்துறையிடம் புகார் ஒன்றைச் செய்தார். வர்த்தக அடையாள முத்திரைச் சட்டத்தின் 82வது பிரிவுக்கு இணங்க, அந்த அரிசி மூட்டைகள் இறக்குமதியாவதற்குத் தடை விதிக்கும்படி அவர் சுங்கத்துறை யைக் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த சுமார் 129 டன் எடையுள்ள 5,000க்கும் அதிக அரிசி மூட்டைகளை பாசிர் பாஞ்சாங் முனையத்தில் சிங்கப்பூர் சுங்கத்துறை கைப்பற்றியது. படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை