சென்னை: பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் களிமண் பிள்ளையார் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
மேலும், பூசைப் பொருள்களான தேங்காய், பழம், பூமாலை, அருகம் புல், எருக்கம் பூ மாலை, கரும்பு, விளாம்பழம், கம்பு, சோளம் ஆகியவற்றின் விற்பனையும் இம்முறை களைகட்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் கோயம்பேடு சந்தையில் களிமண் பிள்ளையார் சிலைகள் 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், மற்ற இடங்களில் சிலை விலை மேலும் அதிகமாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


