பிரதமர் மோடி வருகை: சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

பிரதமர் மோடி வருகை: சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

2 mins read
897cffac-c595-4642-8a51-a1494e66f5ac
பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி, டெல்லியிலிருந்து சிறப்புப் பாதுகாப்புக் குழு சென்னை விமான நிலையத்திலும் மதுராந்தகத்திலும் பாதுகாப்புக் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். - கோப்புப்படம்: எக்கனாமிக் டைம்ஸ்
Google News Preferred Icon

சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்றத் தேர்தலுக்குப் பிரசாரம் செய்வதற்காக வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) தமிழ்நாட்டுக்குச் செல்கிறார்.

பிரதமரின் வரு​கையை ஒட்டி டெல்​லி​யிலிருந்து சிறப்புப் பாது​காப்​புப் படை (எஸ்​பிஜி) ஏஐஜி அமி சந்த் யாதவ் தலை​மையி​லான குழு​வினர் சென்னை விமான நிலை​யத்தைச் சென்றடைந்தனர். அங்கு அவர்கள் பிரதமரின் பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து ஆய்வு நடத்தினர்.

பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி, பாதுகாப்புக் காரணங்களுக்காக சென்னையில் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆளில்லா வானூர்திகள், வெப்பக் காற்று பலூன்கள் உள்ளிட்டவற்றை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறப்புப் பாதுகாப்புக் குழு​வினர் செங்​கல்​பட்டு மாவட்​டம், மது​ராந்​தகத்திற்குச் சென்​று, அங்கு பொதுக்​கூட்​டம் நடக்​கும் பகு​தி, பிரதமரின் ஹெலி​காப்​டர் இறங்​கும் இடம் ஆகிய​வற்​றை​யும் ஆய்வு செய்​ய​வுள்​ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தேர்​தல் பிரசாரப் பொதுக்​கூட்​டம் செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகத்​தில் வரும் 23ஆம் தேதி நடை​பெறவுள்​ளது. அதில் பிரதமர் மோடி உரை​யாற்​றவுள்​ளார்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்சி தலை​வர்​கள் பங்​கேற்​க​வுள்​ளனர்.

மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​கும் பிரதமர் மாலை 4.30 மணிக்கு அங்​கிருந்து ஹெலி​காப்​டரில் புறப்​பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலை​யம் வரு​கிறார்.

ஜனவரி 23ஆம் தேதி பிரதமர் வருகை வரை பழைய சென்னை விமான நிலையத்தை விரிவான பாதுகாப்பின்கீழ் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்