தமிழகத் தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புப் பிரிவுத் தலைமை இயக்குநர் மாற்றம்

தமிழகத் தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புப் பிரிவுத் தலைமை இயக்குநர் மாற்றம்

2 mins read
2c755027-926a-43a4-be3d-bc32d240eeaf
தமிழகத் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள சாய் குமார் (இடம்), லஞ்ச ஒழிப்புப் பிரிவுத் தலைமை இயக்குநர் சந்​தீப் மிட்​டல். - படங்கள்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகத் தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவுத் தலைமை இயக்குநர் டேவிட்​சன் தேவாசிர்​வாதம் ஆகியோரை இந்தியத் தேர்​தல் ஆணை​யம் மாற்றியுள்​ளது.

புதிய தலை​மைச் செயல​ராக எம்​.​ சாய்​கு​மார் நியமிக்கப்பட்டுள்ளார். அதே​போல் லஞ்ச ஒழிப்​புப் பிரிவுத் தலைமை இயக்குநராகச் சந்​தீப் மிட்​டல் பொறுப்பேற்றிருக்கிறார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்​தலுக்​கான அறி​விப்பு சென்ற மாதம் (மார்ச்) 15ஆம் தேதி வெளி​யானது. அன்று முதல் தேர்​தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்​தன.

இந்நிலையில், வேட்புமனுத் தாக்​கல் முடிந்து, இறுதி வேட்​பாளர் பட்டியல் வெளி​யாகவுள்​ளது. ஏப்​ரல் 23ஆம் தேதி தமிழகத் தேர்​தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் மூவாண்டுகளாக ஒரே இடத்தில் பணி​யாற்​றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி​காரி​கள், உயர் பொறுப்புகளில் இருப்​போர், இதர அதி​காரி​களை மாற்ற இந்​தி​யத் தேர்தல் ஆணை​யம் உத்​தர​விட்​டது.

அதனையடுத்து, தமிழகத் தலை​மைச் செயல​ரையும் லஞ்ச ஒழிப்புப் பிரிவுத் தலைமை இயக்குநரையும் மாற்றத் தேர்​தல் ஆணை​யம் புதன்கிழமை உத்​தர​விட்​டது.

வழக்​க​மாகப் புகார்​களின் அடிப்​படை​யில் அதி​காரி​கள் மாற்​றம் நடைபெறும். அந்த வகை​யில் ஏற்​கெனவே, விருதுநகர், நாமக்​கல், கரூர் உட்பட 8 மாவட்ட தலைமை காவல் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

இந்​நிலை​யில், தவெக தலை​வர் விஜய் பிர​சா​ரத்​துக்கு அனு​மதி மறுக்கப்பட்டது, காவல் துறை போதிய பாது​காப்பு வழங்​காதது குறித்த புகார்​கள் தேர்​தல் ஆணை​யத்​துக்​கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்​து, கடந்த ஏப்​ரம் 2ஆம் தேதி தமிழகக் காவல் துறை​யின் சட்ட, ஒழுங்கு பிரிவுத் தலைமை இயக்குநர் ஜி. வெங்​கட ​ராமன் மாற்றப்​பட்​டார். அவருக்​குப் பதில் சந்​தீப் ராய் ரத்​தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்