புழல் சிறையிலிருந்து பெண் கைதி தப்பியோட்டம்

புழல் சிறையிலிருந்து பெண் கைதி தப்பியோட்டம்

1 mins read
547f812d-4c6d-4510-833c-6389c2e164d9
படம் - ஊடகம்
Google News Preferred Icon

திருவள்ளூர்: சென்னை அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது புழல் மத்திய சிறைச்சாலை. இங்கிருந்து பெங்களூருவைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண் கைதி வியாழக்கிழமை தப்பியோடியதை அடுத்து, அவரைப் பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான பணிகளுக்குப் பின்னர் எண்ணிக்கையைக் கணக்கிட்டபோது ஜெயந்தி தப்பியது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்