பள்ளி அருகே மதுக்கடை; மாணவியருக்கு தொல்லை

1 mins read

கிருஷ்­ண­கிரி: கிருஷ்­ண­கிரி ஊராட்சி ஒன்­றி­யம் பெத்­தா­ளாப்­பள்ளி ஊராட்­சிக்கு உட்­பட்ட ஆர்.பூசா­ரிப்­பட்டி கிரா­மத்­தில் தானம்­பட்டி செல்­லும் சாலை­யில் 500க்கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­பு­களில் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் வசித்து வரு­கின்­ற­னர்.

இங்கு கடந்த சில ஆண்­டு­களாக டாஸ்­மாக் மதுக்­கடை செயல்­பட்டு வரு­கிறது. இக்­கடைக்கு மது அருந்த வரு­ப­வர்­களால் அரு­கில் வசிக்­கும் மக்­கள் பல்­வேறு இன்­னல்­களைச் சந்­தித்து வரு­வ­தா­க­வும் எனவே, டாஸ்­மாக் கடையை வேறு இடத்­துக்கு மாற்ற வேண்­டும் என்­றும் அப்­ப­குதி மக்­கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு­கின்­ற­னர்.

மது குடிக்க வரு­வோர் பெண்­கள் மற்­றும் மாண­வி­களைக் கிண்­டல் செய்­வ­தால் அவர்­கள் அச்­சத்­து­டன் இப்­பகுதி­யைக் கடக்­கும் நிலை­யுள்­ளது என்று கிராம மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.