மஞ்சுவிரட்டு: காளை முட்டி காவலர், பார்வையாளர் பலி

1 mins read

புதுக்­கோட்டை: புதுக்­கோட்டை மாவட்­டம் கே.புதுப்­பட்டி அருகே உள்ள கல்­லூர் கிரா­மத்­தில் மஞ்சு விரட்­டுப் போட்டி நடை­பெற்­றது. இதில் சுற்­றுப்­பு­ற கிராமங்­க­ளைச் சேர்ந்த 300க்கும் மேற்­பட்ட காளை­களும் ஏரா­ள­மான காளை­யர்­களும் கலந்­து­கொண்­ட­னர்.

காளையர்களிடம் பிடி கொடுக்காமல் சீறிப் பாய்ந்த காளை ஒன்று அங்கு வேடிக்கை பார்த்­துக் கொண்டிருந்த இளை­யர் ஒருவர் மீது முட்­டி­ய­தில் அவர் உயி­ரி­ழந்­தார்.

மேலும், மஞ்­சு­வி­ரட்டு நிகழ்ச்­சிக்கு பாது­காப்­பிற்­கா­கச் சென்ற மீமி­சல் காவல்­நி­லை­யத்­தில் பணி­பு­ரி­யும் காவ­லர் நவ­நீ­த­கி­ருஷ்­ணன் என்பவரையும் மற்றொரு காளை முட்டித் தள்ளியது. இதில் பலத்த காய­ம­டைந்த அவர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­தார்.

இறந்த நவ­நீதகிருஷ்­ண­னின் உட­லுக்கு மாவட்ட காவல் கண் காணிப்­பா­ளர் திரு­மதி வந்­திதா பாண்டே மலர்­வ­ளை­யம் வைத்து அஞ்­சலி செலுத்தினார். காவரின் மனை­விக்கும் அவர் ஆறு­தல் கூறி­னார்.

இத­னி­டையே, பாது­காப்­புப் பணி­யில் இருந்த காவ­ல­ருக்கு உரிய பாது­காப்பு உப­க­ர­ணங்­கள் வழங்­கப்­ப­ட­வில்லை என்று கூறி பொது­மக்­கள் சாலை­ம­றி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

அவர்­க­ளு­டன் காவல்­துறை அதி­கா­ரி­கள், ஆட்­சி­யர் நடத்­திய பேச்­சு­வார்த்­தை­யில் சம­ர­சம் ஏற்­பட்­டதை அடுத்து மறி­யல் கைவி­டப்­பட்­டது.

இத­னி­டையே, பாது­காப்­புப் பணி­யில் இருந்­த­போது உயி ரிழந்த காவ­ல­ரின் குடும்­பத்­தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்­வர் ஸ்டா­லின், தனது பொது நிவா­ரண நிதி­யில் இருந்து ரூ.20 லட்­சம் நிதி வழங்­க உத்­த­ர­விட்­டுள்­ளார்.