முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்

2 mins read

புது­டெல்லி: தமி­ழ­கத்­துக்­கான முத­லீ­டு­களை திரட்­டு­வ­தற்­காக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அடுத்த மாத இறு­தி­யில் வெளி­நா­டு­களுக்குப் பய­ணம் மேற்­கொள்ள இருப்­ப­தாக அரசு வட்­டா­ரத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சிங்­கப்­பூர், ஜப்­பான் உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு அவர் செல்ல இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

சென்­னை­யில் அடுத்­தாண்டு ஜன­வரி மாதம் முத­லீட்­டா­ளர்­கள் மாநாடு நடை­பெ­றும் என்று ஏற்­கெ­னவே நிதி­நிலை அறிக்­கை­யில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில், புதிய முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­கா­க­வும் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு அழைப்பு விடுப்­ப­தற்­கா­க­வும் மே 23ஆம் தேதி ஜப்­பான், சிங்­கப்­பூர் நாடு­க­ளுக்கு முதல்­வர் ஸ்டா­லின் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்ள உள்­ள­தா­க­வும் அதற்கு ஏற்ற வகை­யில் பய­ணத் திட்­டம் அமைக்­கப்­பட்டு உள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் ஏற்­கெ­னவே பல்வேறு திட்­டங்­களில் ஜப்­பானிய நிறு­வ­னங்­கள் முத­லீடு செய்­துள்­ளன.

இந்­நி­லை­யில் நகர்ப்­புற வளர்ச்­சித் திட்­டங்­களில் முத­லீடு செய்­யு­மாறு ஜப்­பான், சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட உள்­ளது.

அனைத்­து­லக முத­லீட்­டா­ளர் மாநாட்­டில் பங்­கேற்­கு­மாறு அழைப்பு விடுக்க துறை­வா­ரி­யாக அமைச்­சர்­கள் பலர் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்ல திட்­ட­மிட்­டுள்­ள­தாக ஊட­கத் தக­வல்்­கள் தெரி­விக்­கின்­றன.

தமி­ழ­கத்­துக்­கான முத­லீ­டு­களை திரட்­டும் பொருட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் துபாய்க்கு பய­ணம் மேற்­கொண்­டார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

அங்கு தொழில் அதி­பர்­க­ளைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை மேற்­கொண்­டார். அதன் பல­னாக ரூ.2,600 கோடிக்­கான முத­லீ­டு­களை தமிழ்­நாட்­டுக்கு கொண்­டு­வர புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கின.

இதன் மூலம் 9,700 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும் என தமி­ழக அரசு தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில் மீண்­டும் முத­லீ­டு­களை ஏற்க வெளி­நா­டு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­கி­றார் தமி­ழக முதல்­வர் ஸ்டா­லின்.