மெட்ரோ ரயில் திட்டத்துக்காக நகரெங்கும் 400 தூண்கள்

2 mins read
998c166a-d735-4635-b51c-20872d7a5868
-

சென்னை: அண்­மைய சில நாள்க­ளாக சென்­னை­யில் நடை­பெற்று வரும் மெட்ரோ ரயில் திட்­டப்­ப­ணி­கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன என்­றும் இது­வரை சுமார் நானூறு தூண்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

சென்­னை­யில் நிலவி வரும் கடும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லுக்­குத் தீர்­வு­கா­ணும் வித­மா­கப் பல்­வேறு நட­வ­டிக்­கைள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அவற்­றுள் மெட்ரோ ரயில் திட்­டம் மிக முக்கி­ய­மானதாகும்.

சென்­னை­யில் இரண்­டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்­டப்­ப­ணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இதன் மூலம், நான்கு, ஐந்­தா­வது வழித்­த­டத்­தில் பல்­வேறு இடங்­களில் உயர்­மட்­டப்­பாதை, மெட்ரோ ரயில் நிலை­யங்­கள் அமைக்­கும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இவ்­விரு வழித்­த­டங்­க­ளுக்­காக இது­வரை 400 தூண்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

சென்னை மாந­க­ரில் மெட்ரோ ரயில் திட்ட சேவை மூலம் போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஓர­ளவு குறைந்­துள்­ளது. எனி­னும் மேலும் சில வழித்­த­டங்­களில் இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டால்­தான் முழுப் பலன் கிடைக்­கும் என நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், சென்னை மெட்ரோ ரயில் இரண்­டாம் கட்ட திட்­டம் , ரூ.63,246 கோடி மதிப்­பில் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. இதன் மூலம் 118.9 கிலோ மீட்­டர் தொலை­வுக்கு மூன்று வழித்­த­டங்­களில் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

மேலும், இரண்­டாம் கட்­டத்­தில் 42.2 கிலோ மீட்­டர் தூரத்­துக்கு சுரங்­கத்­தி­லும் 76.3 கிலோ மீட்டர் தூரத்­துக்கு உயர்மட்­டத்­தி­லும் பாதை­கள் அமைக்­கப்­பட உள்­ளன.

அனைத்து பணி­க­ளை­யும் எதிர்­வ­ரும் 2026ஆம் ஆண்­டுக்­குள் முடிப்­பது என இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தற்­போது, 45 இடங்­களில் திட்­டப் பணி­கள் தீவி­ர­மாக நடை­பெற்று வரு­வ­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சில இடங்­களில் இத்­திட்டப் பணி­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் மொத்­தம் 30 மெட்ரோ ரயில் நிலை­யங்­க­ளுக்­கான பணி­கள் வேகம் பெற்­றுள்­ளன என­வும் மெட்ரோ ரயில் நிறு­வன அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இவற்­றுள் 18 உயர்­மட்ட ரயில் நிலை­யங்­கள் என்­றும் 12 சுரங்­கப்­பாதை ரயில் நிலை­யங்­கள் என்­றும் அவர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

"மெட்ரோ ரயில் சேவைக்­காக ஏரா­ள­மான தூண்­கள் அமைக்­கப்­பட உள்­ளன. அவற்­றுள் நானூ­றுக்­கும் மேற்­பட்ட தூண்­களை அமைக்கும் பணி முடி­வ­டைந்­துள்­ளது.

"ஒரே சம­யத்­தில் காட்­டுப்­பாக்­கம், கும­ணன்­சா­வடி, கரை­யான்­சா­வடி, முல்­லை­தோட்­டம் உள்­ளிட்ட பல இடங்­களில் ரயில் நிலை­யங்­கள் அமைக்­கும் பணி­களும் நடை­பெறு­கின்­றன.

"சுரங்க ரயில் நிலை­யங்­கள் அமைக்­கும் பணி­யும் தொடங்­கப்­பட்­டுள்­ளது.

"கலங்­கரை விளக்­கம், கச்­சேரி சாலை, நடே­சன் பூங்கா, பன­கல் பூங்கா, கோடம்­பாக்­கத்­தில் சுரங்க மெட்ரோ ரயில் நிலை­யங்­கள் அமைக்­கும் பணி­களும் நடை­பெற்று வரு­கின்­றன," என அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

படுவேகத்தில் இரண்டாம் கட்டத் திட்டப்பணிகள்; 2026க்குள் பணிகளை முடிக்க இலக்கு