தீபாவளியைக் கொண்டாட இலவச வேட்டி, சேலை வழங்கிய மா. சுப்பிரமணியன், மனோ தங்கராஜ்

தீபாவளியைக் கொண்டாட இலவச வேட்டி, சேலை வழங்கிய மா. சுப்பிரமணியன், மனோ தங்கராஜ்

1 mins read
9c0d2f7a-8aa1-412f-a9f2-63f9e5705d69
தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், பெரம்பலூரில் ஏழை மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கும் அமைச்சர் மனோ தங்கராஜ். படம்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

சென்னை: தீபாவளித் திருநாளை முன்னிட்டு சென்னை சைதாப் பேட்டை தொகுதியில் முதியோர், கணவரை இழந்த கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு விலையில்லா வேட்டி-சேலைகளை நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று வழங்கினார்.

அதன்பிறகு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வீடு தேடிச் சென்று மக்கள் குறைகளைக் கேட்டறியும் "நடக்கலாம் வாங்க, கோரிக்கை மனுக்களைத் தாங்க" திட்டத்தின் கீழ், மக்களின் அடிப்படை பிரச்சி னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டு வருவதாகத் தெரி வித்தார். இதேபோல், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகளை வழங்கியதாக தன் டுவிட்டர் பக்கத்தில் தகவல் தொழல்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்டுள்ளார்.