மண­மான ஐந்து நாளில் மரு­ம­க­னைக் கொன்ற மாம­னார்

1 mins read
e7e84fe1-124d-4c0e-972a-0162687c1c25
-

திரு­வா­ரூர்: திருத்­து­றைப்­பூண்டி அருகே, திரு­ம­ண­மான ஐந்து நாள் களில் புது­மாப்­பிள்­ளையை அரி­வா­ளால் வெட்­டிக்­கொன்ற மாம­னார் உட்பட இரு­வர் சனிக்­கி­ழமை அன்று கைது செய்­யப்­பட்­ட­னர்.

திரு­வா­ரூர் மாவட்­டம், சிங்­க­ளாந்தி மங்­க­ள­நா­ய­கி­பு­ரத்­தைச் சேர்ந்­த­வர் சிற்­ற­ர­சன். நக­ராட்சி ஊழி­ய­ரான இவ­ரது மகன் முத்­த­ர­ச­னும், 25, அதே ஊரைச் சேர்ந்த ரவிச்­சந்­தி­ரன் மகள் அர­விந்­தி­யா­வும், 22, இரண்டு ஆண்­டு­க­ளாக காத­லித்து வந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், கடந்த 13ஆம் தேதி­யன்று இரு­வீட்­டார் சம்­ம­தத்­து­டன் திரு­ம­ணம் நடந்­தது.

மகள், மரு­ம­கனை மறு­வீட்­டிற்கு அழைத்து ரவிச்­சந்­தி­ரன் கறி­விருந்து வைத்­துள்­ளார்.

அப்­போது நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து முத்­த­ர­சன் மது குடித்­துள்­ளார். ஏன் குடித்­தீர்­கள்? என்று கேட்ட மனைவி அர­விந்­தி­யாவை முத்­த­ர­சன் அடித்­துத் தாக்­கி­யுள்­ளார். உடனே, எதற்­காக என் மகளை அடித்­தாய்? என அர­விந்தி யாவின் தந்தை கேட்­டுள்­ளார். அவ­ரை­யும் முத்­த­ர­சன் தாக்­கி­னார்.

பொறுமை இழந்த மாம­னார் அரி­வாளை எடுத்து வந்து முத்­த­ர­சனை வெட்­டி­னார். சம்­பவ இடத்­தி­லேயே முத்­த­ர­சன் இறந்­தார். ரவிச்­சந்­தி­ரன் திருத்­து­றைப்­பூண்டி காவல்­நி­லை­யத்­தில் சர­ண­டைந்­தார். விசா­ரணை தொடர்­கிறது.

கொல்­லப்­பட்ட மரு­ம­கன் முத்­த­ர­சன் (நடு­வில்), கைது செய்­யப்­பட்ட மாம­னார் ரவிச்சந்திரன். படம்: தமிழக ஊடகம்