மது போதையில் மக்களைத் தாக்கிய 5 இளையர்கள் கைது

1 mins read
f2f6e56c-1b0b-45fe-94ce-0a8cbd73e1a1
இளையரை பிடித்துச் செல்லும் பொதுமக்கள். படம்: ஊடகம் -

கோவை: கோவை­யில் கஞ்சா போதை­யு­டன் இருந்த ஐந்து இளை­யர்­கள், கண்­ணில்­பட்ட பொது­மக்­களை எல்­லாம் அரி­வா­ளால் தாக்­கி­னர். நூற்­றுக்கணக்­கான பொது­மக்­கள் ஒன்­று­சேர்ந்து அவர்­க­ளைப் பிடித்து காவல் நிலை­யத்­தில் ஒப்­ப­டைத்­த­னர்.

கோவை நர­சிம்­ம­நா­யக்­கன் பாளை­யம் காலனி பகு­தி­யைச் சேர்ந்­த­வர் சண்­மு­க­சுந்­த­ரம். இவ­ரது வீடு ஒன்­றில் திரு­நெல்­ வேலி­யைச் சேர்ந்த சிவா என்ற இளை­யர் தங்­கி­யுள்­ளார்.

இந்நிலையில், சிவா­வின் பிறந்தநாளைக் கொண்­டா­டு­வதற்­காக திரு­நெல்­வே­லி­யில் இருந்து இவ­ரது ஐந்து நண்­பர்­கள் வந்­துள்­ள­னர். நேற்று முன்­தி­னம் இரவு முழு­வ­தும் மது­ அ­ருந்தி, கஞ்சா பயன்­ப­டுத்தி போதை­யில் கூச்­ச­லிட்­ட­படி பிறந்­த­நாள் கொண்­டாட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். மறு­நாள் காலை­யில் சிவா திரு­நெல்­வே­லிக்­குச் சென்­று­விட்­டார்.

இந்­நி­லை­யில், வீட்­டின் உரி­மை­யா­ளர் இளை­யர்­க­ளைக் கண்­டித்­ததை அடுத்து கோப­ம­டைந்த இளை­யர்­கள் வீட்­டின் உரி­மை­யா­ளர்கள், போவோர் வரு­வோர், கண்­ணாடி சன்­னல்­கள், கார்­கள், இரு­சக்­கர வாக­னங்­களை அடித்து நொறுக்­கி­யுள்­ள­னர்.

கிட்­டத்­தட்ட மூன்று மணி­நேரம் நடந்த இந்தச் சம்­ப­வத்­தில் காய­ம­டைந்த இளை­யர்­களும் படு­கா­ய­முற்ற பொது­மக்­களும் சிகிச்­சைக்­காக கோவை அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். இது­கு­றித்து பெரி­ய­நா­யக்­கன்­பா­ளை­யம் காவல்துறையினர் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.