கழிவுநீர்த் தொட்டியை சுத்தப்படுத்த இயந்திரம்: சாதித்த ஐஐடி மாணவர்கள்

2 mins read
8822561e-6590-4627-b3f5-a8a759696344
-

சென்னை: கழி­வு­நீர்த் தொட்­டியைச் சுத்­தம் செய்­வ­தற்கு என நவீன கரு­வியை சென்னை ஐஐடி கல்வி நிலைய மாண­வர்­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர். இதற்­குப் பாராட்­டு­கள் குவி­கின்­றன.

தமி­ழ­கத்­தில் கழி­வு­நீர்த் தொட்­டி­யைச் சுத்­தம் செய்­யும்­போது நச்­சுப்­புகை தாக்­கு­வ­தால் தொழி­லாளர்­கள் பலி­யா­வது தொடர்­க­தை­யா­கி­விட்­டது. அண்­மை­யில்­கூட மதுரை­யில் இது­போன்ற துய­ரச் சம்­ப­வம் நிகழ்ந்­தது.

இந்­நி­லை­யில், இத்­த­கைய உயிரி­ழிப்­பு­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கும் வித­மாக சென்னை ஐஐடி மாண­வர்­கள் தங்­கள் பேரா­சி­ரி­யர் பிரபு ராஜ­கோ­பால் தலை­மை­யில், கழி­வு­நீர்்த் தொட்­டி­களை சுத்­தப்படுத்த 'ரோபோ' தொழில்­நுட்ப முறை­யில் புதிய அதி­ந­வீன கரு­வி­யைக் கண்டு­பி­டித்து உள்­ள­னர்.

கழி­வு­நீர்த் தொட்­டி­யில் உள்ள கெட்­டி­யான கச­டு­களை வெட்டி ஒரே மாதி­ரி­யாக மாற்­றும் வகை­யில் ரோபோ இயந்­தி­ரம் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது. பின்­னர் இந்த கருவி மூலம் கழி­வு­நீரை முற்­றி­லும் உறிஞ்சி எடுத்து, அதை அகற்ற முடி­யும். இதன் மூலம் தொட்­டி­யைச் சுத்­தம் செய்­யும்­போது நச்சு ­வாயு தாக்கி உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­ப­டு­வதை முற்­றி­லும் தடுக்க முடி­யும் என அம்­மா­ண­வர்­கள் தெரி­வித்­த­னர்.

நேற்று முன்­தி­னம் சென்­னை­யில் நடை­பெற்ற ஒரு நிகழ்ச்­சி­யில் இந்­தப் புதிய இயந்­தி­ரத்­தின் அறிமுக விழா நடை­பெற்­றது.

இதில் கடந்த 2007ஆம் ஆண்டு கழி­வு­நீர்த் தொட்­டி­யைச் சுத்­தப்­ப­டுத்­தும் பணி­யின்­போது நச்­சுப்­புகை தாக்கி உயி­ரி­ழந்த தொழி­லா­ளி­யின் மனைவி நாகம்­மா­ளுக்கு அந்த இயந்­தி­ரத்தை மாண­வர்­கள் வழங்­கி­னர்.

"இனி­மே­லும் மனித உயிர்­கள் நச்­சுப்­புகை தாக்கி பறி­போ­கக்­கூடாது. இந்த இயந்­தி­ரத்­தைப் பெற்­றுக்­கொண்ட நாகம்­மாள் தாம் வசிக்­கும் பகு­தி­யில் கழி­வு­நீரை அகற்ற அதைப் பயன்­ப­டுத்­து­வார்," என்­றார் பேரா­சி­ரி­யர் பிரபு ராஜ­கோ­பால். இதையடுத்து மாணவர்க ளுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

படம்: தகவல் ஊடகம்