'வாழ்க்கையை அனுபவிக்க தோல்நோய் ஒரு தடையில்லை'

4 mins read
f1b81b9e-fa80-457b-aa14-bc6ad93b6321
சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட குமாரி நாதன், மனந்தளராமல் தனது வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க உறுதி பூண்டுள்ளார். படம்: எஸ்பிஹெச் -

40 ஆண்டுகளாக சொரியாசிஸ் தோல்நோய் இருந்தும், அதை தடங்கலாகப் பார்க்காமல் வாழ்க்கையை வாழும் பெண்மணி

சொரி­யா­சிஸ் என்ற தோல்­நோ­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார் குமாரி ஃபுளோரன்ஸ் நாதன். இருப்­பி­னும் 70 வய­தான இவர், அந்த நோயை ஒரு தடை­யா­கக் கரு­தா­மல் தன் வாழ்க்­கையை தான் விரும்­பி­ய­படி மகிழ்ச்­சி­யு­ட­னும் முழு­மை­யா­க­வும் வாழ உறுதி பூண்­டுள்­ளார்.

வித­வி­த­மான ஆடை­களை அணிந்து புகைப்­ப­டங்­கள் எடுப்­ப­தில் அவ­ருக்கு அலாதி இன்­பம். நோயின் தாக்­கம் அதற்கு எப்­போ­தும் தடை­யாக இருந்­த­தில்லை என்­கி­றார் குமாரி நாதன்.

நாற்­பது ஆண்­டு­க­ளாக இந்­தத் தோல் நோயு­டன் அவ­திப்­படும் இவர், அந்த வலி­யை­யும் வேத­னை­யை­யும் பொருட்­ப­டுத்­தா­மல், ஆக்­க­க­ர­மான வாழ்க்­கைக் கண்­ணோட்­டத்­தைக் கொண்­டுள்­ளார்.

சிறு வய­தில் குமாரி நாத­னுக்கு மாட­லிங் பற்றி பத்­தி­ரி­கை­களில் படிக்க ஆசை.

படங்­க­ளுக்கு 'போஸ்' கொடுக்க பிடிக்­கும் என்று சிரித்­துக்­கொன்டே கூறி­னார். திரு­ம­ணம் புரிந்­து­கொள்­ளாத இவ­ருக்கு வெளி­நா­டு­க­ளுக்­குப் பய­ணம் செய்து புதிய மனி­தர்­க­ளைச் சந்­திக்க பிடிக்­கும்.

குமாரி நாத­னுக்கு 32 வய­தாக இருக்­கும்­போது, அவ­ருக்கு உடம்பு, தலை முழு­வ­தும் சிவப்பு கொப்­ப­ளங்­கள் தோன்ற ஆரம்­பித்­தது. அவ­ரின் முடி உதிர தொடங்­கி­யது. நகங்­கள் தடி­ன­மா­கி­ய­தால் அவ­ரால் நகங்­களில் ஒப்­பனை செய்ய முடி­ய­வில்லை. தோல் உரிய தொடங்­கி­ய­தோடு, அவ­ருக்கு மூட்­டு­களில் வலி ஏற்­பட ஆரம்­பித்­தது.

அந்த வலி ஏற்­பட்ட சமை­யத்­தில், அவ­ருக்கு குடும்­பத்­தி­ன­ரின் ஆத­ரவு இருந்­த­தால், அவர் தன் நோயை பார­மாக எடுத்­துக்­கொள்­ள­வில்லை.

இருப்­பி­னும், காலில் உள்ள கொப்­ப­ளங்­க­ளை­யும் காயங்­க­ளை­யும் மறைக்க காலு­றை­களை அணி­வது பற்றி யோசித்­தார். இறு­தி­யில், இவர் தனது புதிய உரு­வத்தை மன­மார ஏற்­றுக்­கொண்டு, அது குறித்து கேட்­கப்­படும் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்க ஆரம்­பித்­தார்.

தற்­பொ­ழுது இவர் சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கி­றார். இவ­ரின் தோல் நிலையை பொறுத்து, வாரத்­திற்கு ஒன்று அல்­லது இரண்டு முறை அவர் ஒளிக்­க­திர் சிகிச்சை பெறு­கி­றார். 1990 ஆண்­டுக்கு பின் இந்த சிகிச்­சையை பெற்று வரு­கி­றார்.

பல ஆண்­டு­க­ளாக, குமாரி நாதன் தனது நோயு­டன் தன்­னம்­பிக்­கை­யோடு வாழக் கற்­றுக்­கொண்­டார்.

சொரி­யா­சிஸ் நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மனந்­த­ளர கூடாது என்­றும் மற்­ற­வர்­க­ளுக்கு இந்த நோய் குறித்­துச் சொல்­லும் போது, அவர்­களும் இந்த கொப்­ப­ளங்­க­ளைப் பற்றி நாள­டை­வில் பொருட்­ப­டுத்­த­மாட்­டார்­கள் என்று வலி­யு­றுத்­தி­னார். இவ­ரின் கதை பாதிக்­க­பட்ட மற்­ற­வர்­க­ளை­யும் ஊக்­கு­விக்­கும் என்று குமாரி நாதன் நம்­பு­கி­றார்.

சொரி­யா­சிஸ்

எக்­ஸிமா எனப்­படும் அரிக்­கும் தோல­ழற்சி என்று தவ­றாக கரு­தப்­படும் சொரி­யா­சிஸ், சிங்­கப்­பூ­ரில் சுமார் 40,000 பேரைப் பாதிக்­கிறது என்று தேசிய தோல் மையத்­தின் ஆலோ­ச­கர் வாங் டிங்­யு­வான் பகிர்ந்­து­கொண்­டார்.

எக்­ஸி­மா­வால் தோலில் வீக்­கம் ஏற்­படும். வறண்ட, சிவப்பு, அரிக்­கும் தோலு­டன் இது வெளிப்­ப­ட­லாம். மோச­மான நிலை­களில், தோலி­லி­ருந்து சீழ் அல்­லது ரத்­தம் கசி­யும்.

இது­போல், சொரி­யா­சி­ஸால் பாதிக்­கப்­பட்ட தோலில் இளஞ்­சி­வப்பு அல்­லது சிவப்­புப் புண்­கள் தோன்­றும். முழங்கை, முழங்­கால் போன்ற தோல் மடிந்த இடங்­களில் இந்­தப் புண்­கள் ஏற்­ப­ட­லாம். தோல் வறண்ட நிலை­யில், செதில்­கள் காணப்­படும். ஆனால், ஒரு­வ­ரி­ட­மி­ருந்து இன்­னொ­ரு­வ­ருக்கு இந்த நோய் பரவ வாய்ப்­பில்லை.

பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தோல் உரி­தல், தடி­ன­மான நகங்­கள், முடி வள­ரும் இடங்­களில் கொப்­ப­ளங்­கள் எதிர்­கொள்­ள­லாம்.

சொரி­யா­சிஸ் மூட்­டு­வலி நோய்க்கு வழி­வ­குக்­கும். மேலும், இது நீரி­ழிவு நோய், இரத்­தத்­தில் அதிக கொழுப்பு, இரத்த அழுத்த நோய், இரு­தய நோய் போன்ற நோய்­கள் ஏற்­ப­டக்­கூ­டும்.

ஒரு­வ­ரின் அடை­யா­ளத்­தைப் பாதிக்­கும் வகை­யில் காயங்­கள் இருப்­ப­தால், அவ­ரது சமூக வாழ்க்கை மற்­றும் உறவு முறை­கள் பாதிக்­கக்­கூ­டும்.

இதில், சொரி­யா­சிஸ் நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மன­உ­ளைச்­சல், மன­அ­ழுத்­தம் போன்ற மன­நல பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­ளும் அபா­யத்­திற்கு ஆளாக நேரி­டும்.

குடும்ப வர­லாறு, சுற்­றுச்­சூ­ழல் கார­ணங்­க­ளால் சொரி­யா­சிஸ் நோய் வரு­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­ரிக்­கும் என்­கி­றார் சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யின் தோல் மருத்­து­வ­ரான உதவி பேரா­சி­ரி­யர் டான் கி வெய்.

சாங்கி பொது மருத்­து­வ­மனை ஆண்­டிற்கு 500 முதல் 700 வரை சொரி­யா­சிஸ் நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளித்து வரு­கிறது. இந்த எண்­ணிக்கை பல ஆண்­டு­க­ளாக அதி­க­ரித்து வரு­கிறது என்­ப­தை­யும், இது உல­கப் போக்­கு­டன் ஒத்­துள்­ளது என்று பேரா­சி­ரி­யர் டான் கூறு­கி­றார்.

16 மற்­றும் 22 வய­திற்கு இடைப்­பட்ட இளம் வய­தி­னர், அல்­லது பிற்­கா­லத்­தில் 57 முதல் 60 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்­க­ளுக்கு சொரி­யா­சிஸ் நோய் வர­லாம்.

சொரி­யா­சிஸ் நோய்க்கு நிரந்­த­ரத் தீர்வு இல்லை. எனி­னும், ஸ்டீ­ராய்டு மருந்­து­கள், வைட்­ட­மின் டி மருந்­து­கள், ஒளிக்­க­திர் சிகிச்சை மற்­றும் நோயெ­திர்ப்­புத் தடுப்பு மருந்­து­கள் பய­ன­ளிக்­கக்­கூ­ரும்.

சொரி­யா­சிஸ் நோய்க்கு வழக்­க­மான சிகிச்­சை­யான ஒளிக்­க­திர் சிகிச்சை பல தனி­யார் தோல் மருந்­த­கங்­க­ளி­லும் வழங்­கப்­ப­டு­கிறது. தோலில் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பைப் பொறுத்து, ஒரு­முறை ஒளிக்­க­திர் சிகிச்சை செய்­து­கொள்ள குறைந்­த­பட்­சம் $100 ஆகும். சரு­மத்­தில் உள்ள அதி­கப்­ப­டி­யான நோயெ­திர்ப்பு உயி­ர­ணுக்­க­ளின் எண்­ணிக்­கையை குறைக்க இந்த சிகிச்சை பய­ன­ளிக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.