ஃபாண்டி அகமதுக்கு பயிற்றுவிப்பாளர் பொறுப்பு

ஃபாண்டி அகமதுக்கு பயிற்றுவிப்பாளர் பொறுப்பு

1 mins read
Google News Preferred Icon

அடுத்த ஆண்டு ஆசிய விளை யாட்டிலும் 2019ஆம் ஆண்டில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் களமிறங்கும் சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் புதிய பயிற்றுவிப்பாளராக முன்னாள் நட்சத்திர வீரர் ஃபாண்டி அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பயிற்றுவிப் பாளரான ரிச்சர்ட் டார்டியின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது. அவரது ஒப்பந்தம் முடிவதற்குள் அவர் பயிற்றுவிப்பாளர் பொறுப் பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். தேசிய இளையர் குழுக்களின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான டார்டியுடன் சேர்ந்து இரண்டு பயிற்றுவிப்பாளர்களும் மூத்த அதிகாரி ஒருவரும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தைவிட்டு வெளியேறுகின்றனர்.