வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு

2 mins read
21bcf5f4-5f1c-45df-8555-a72ffe5983ed
-

ஒரு­வர் வேலை­யி­லி­ருந்து ஓய்வு பெற்ற பிற­கு­தான் அவர்­வ­சம் உள்ள மசே­நிதி சேமிப்பைத் தவணை முறை­யில் திரும்­பப் பெறமுடி­யும். வாழ்­நாள் முழு­வ­தும் ஒரே வேலையைச் செய்து ஓய்­வு­பெற்ற பிறகே இச்­சே­மிப்பு பயன்­படும் என்­பது இந்­தக் கொள்கை வகுக்­கப்­பட்­ட­போது இருந்த பர­வ­லான கண்­ணோட்­டம்.

இக்­கா­லத்­திலோ வேலை நிலை­யாக இருப்­ப­தில்லை. பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக ஊழி­யர்­கள், குறிப்­பாக இளை­யர்­கள் வேலை மாறு­கின்­ற­னர். சிலர் புதிய வேலையைத் தேடிக்கொள்வதற்கு முன்னரே ் பழைய வேலையை விட நேரிட்டு இ­ருக்­க­லாம். அத்­த­கைய சூழல்களில் அவர்களின் மத்­திய சேம­நிதியில் உள்ள தொகை கைகொடுக்கக்கூடும்.

வேலையிடங்களில் புதிய திறன்­கள் தேவைப்­படும் நிலை­யில் ஊழி­யர்­கள் தொடர்ந்து தங்­கள் திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொண்டே இருக்­க­வேண்­டிய சூழ­ல் நிலவுகிறது. ஊதி­ய­மில்லா விடுப்­பு­கள் போன்ற இடை­வெ­ளி­கள் சில­ருக்கு அதி­கம் தேவைப்­ப­ட­லாம்.

வாழ்­நாள் கல்வி முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்ள நிலை­யில் மேலும் படிக்க ஆசைப்­ப­டு­வோ­ரும் உடல்­ந­லக் குறை­வால் ஓய்வு தேவைப்­ப­டு­வோ­ரும் குறு­கிய காலத்­திற்கு வேலை­யைத் தொடர முடி­யா­மல் போகக்­கூ­டும். ஓய்­வுக்­கா­லத்­தைக் காட்­டி­லும் இது­போன்ற அவ­ச­ரச் சூழ­லில் சில­ருக்கு மசே­ நி­தித் தொகை தேவைப்­ப­ட­லாம்.

முன்­ன­தாக மழ­லை­யர் கல்­வித்­து­றை­யில் ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றிய திரு­வாட்டி பவித்ரா ஷர்­மு­கம், 30, காலஞ்­சென்ற தமது மாமி­யாரை முழு­நே­ர­மா­கப் பரா­ம­ரிக்­கும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­தால் கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக ஒரே வேலை­யில் நீடிக்­க­முடி­ய­வில்லை.

கண­வ­ரின் ஆத­ர­வோடு திறன் மேம்­பாட்­டில் ஈடு­பட்­டா­லும் முன்பு சேமித்த மசே­ நி­தித் தொகையை இப்­போது சிறி­த­ளவு பயன்­ப­டுத்த முடிந்­தால் நன்­றாக இருக்­கும் என்­றார் அவர்.

"மன­நல சிகிச்­சைக்­காக மெடி­சேவ் பணத்­தைப் பயன்­ப­டுத்­தி­னேன். ஆனால் அதற்­கான வரு­டாந்­தர வரம்­பை­யும் கடந்­து­விட்­டேன்," என்­றார் திரு­வாட்டி பவித்ரா.

"ஏற்­கெ­னவே மூன்­றாண்­டு­கள் வேலை செய்து ஈட்­டி­யுள்ள மசே­ நி­தித் தொகையை முன்­கூட்­டியே பயன்­ப­டுத்­து­வ­தில் நன்­மை­கள் உள்­ளன. படிப்­புக்­கா­க­வும் மருத்­து­வத்­திற்­கா­க­வும் என் பணத்­தையே நான் செலவு செய்­தி­ருக்­க­லாம்," என்­றார் அவர்.

இவ­ரைப்­போ­லவே பல ஆண்­டு­கள் முழு­நேர வேலை இல்­லா­மல் தம் பெற்­றோ­ரின் ஆத­ர­வில் இருந்­தார் திரு­வாட்டி அபி­ராமி சுப்­ர­ம­ணி­யன், 40. கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளாக வழக்­க­றி­ஞரா­கப் பணி­யாற்­றும் அவர், அதற்­கு­முன் ஒன்­பது ஆண்­டு­களாக தன்­னு­ரி­மைத் தொழி­லா­ள­ராக துணைப்­பாட ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றி­னார்.

"இதற்கு முன்பு வெளி­நாட்­டில் வேலை செய்­தேன், அத­னால் எனக்கு மத்­திய சேம­நி­திக் கணக்­கில் பணம் இல்லை. என் நிலை­யில் இருப்­ப­வர்­க­ளுக்கு மசே­ நிதி­யி­லி­ருந்து உத­வித் தொகை­ வழங்­கப்­பட்­டால் நன்­றாக இருக்­கும். வேலை­யில் சேர­வேண்­டுமே என்ற நெருக்­க­டி­யால் சிலர் தங்­க­ளுக்­குப் பொருந்­தாத வேலை­களில் சேர்ந்து அவ­திப்­படு­வ­தைத் தடுக்க இத்தகைய ­திட்­டம் உத­வக்­கூ­டும்," என்று அவர் குறிப்­பிட்­டார்.