கரிம வெளியீடற்ற இலக்கை இரட்டிப்பாக்கும் தெமாசெக்

கரிம வெளியீடற்ற இலக்கை இரட்டிப்பாக்கும் தெமாசெக்

1 mins read
af121812-931e-4798-a2b9-dd9bd7aadf52
இடைக்காலக் கரிம வெளியேற்ற இலக்குகளை அடைவதில் சவால்கள் இருந்தபோதிலும் தூய்மை எரிசக்தியில் தெமாசெக் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தெமாசெக் நிறுவனத்தின் நீடித்த நிலைத்தன்மை தொடர்பான முதலீடுகள் நீண்டகால அடிப்படையில் வலுவான லாபத்தைக் கொடுத்துள்ளன.

மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல்கள், எரிசக்திப் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தியுள்ளதால், எரிசக்தி உள்கட்டமைப்புத் துறையில் தனது முதலீடுகளைத் தெமாசெக் இரட்டிப்பாக்குகிறது.

இதனால் அந்த நிறுவனம் நிகர கரிம வெளியீடற்ற இலக்கையும் இரட்டிப்பாக்கியுள்ளது.

அதேபோல் அதிக மின்சாரத் தேவையை ஏற்படுத்தும் தரவு மையங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையிலும் தனது முதலீடுகளை அதிகரிக்கத் தெமாசெக் திட்டமிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுக்கு அதிக எரிசக்தி பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு ஏற்றவாறு நிலையான, தூய்மையான ஆற்றல் மூலம் தயாரிக்கப்படும் எரிசக்திகள் தேவைப்படுகின்றன. அதை முதலீட்டு வாய்ப்புகளாகத் தெமாசெக் பார்க்கிறது.

இடைக்காலக் கரிம வெளியேற்ற இலக்குகளை அடைவதில் சவால்கள் இருந்தபோதிலும் தூய எரிசக்தியில் தெமாசெக் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.

தெமாசெக் நிறுவனம் 2050ஆம் ஆண்டிற்குள் தனது ஒட்டுமொத்த முதலீட்டுத் தொகுப்பிலும் நிகர கரிம வெளியீடற்ற இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில், 2030ஆம் ஆண்டிற்குள் தனது ஒட்டுமொத்த முதலீட்டுத் தொகுப்பில் கரிம வெளியேற்றத்தைப் பாதியாகக் குறைக்க தெமாசெக் இலக்கு வைத்திருந்தது. ஆனால், அந்த இலக்கை எட்டுவது சாத்தியமன்று என்று அது கூறியுள்ளது

தெமாசெக் நிறுவனம் 2026ஆம் ஆண்டின் நிலைத்தன்மை அறிக்கையைப் புதன்கிழமை (ஜூலை 8) வெளியிட்டது. அதில் இந்தத் தகவல்களை அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்