லிட்டில் இந்தியாவில் ரஷ்ய கலாசார நிலையக் கட்டுமானம் தொடரும்

லிட்டில் இந்தியாவில் ரஷ்ய கலாசார நிலையக் கட்டுமானம் தொடரும்

1 mins read
15276011-0cd0-4599-84e6-82af36cdd7bb
-

உக்­ரே­னி­யப் படை­யெ­டுப்­பின் தொடர்­பில் ரஷ்யா மீது சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் மற்­றும் வர்த்­த­கத் தடை­களை விதித்­த­போ­தும், லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தில் ரஷ்­யக் கலா­சார நிலை­யத்­தைக் கட்­டு­வதற்­கான இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பு தொட­ரும் எனத் தெரி­ய­வந்­துள்­ளது. ரங்­கூன் சாலை­யில் இம்­மா­தம் 7ஆம் தேதி தொடங்­கிய கட்­டு­மா­னப் பணி­களை நிறுத்­தும் எண்­ணம் இல்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ரஷ்­யக் கலா­சார நிலை­யத்­திற்­காக ஃபேரர் பார்க் வட்­டா­ரத்­தில் 3,265 சதுர மீட்­டர் நிலப் பரப்பு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது (படம்). அதில் எவ்­வ­ளவு கட்­ட­டத்­துக்­குப் பயன்­படுத்­தப்­படும் என்ற தெளி­வான தக­வல் இல்லை. 2017ஆம் ஆண்டு முதல் 2047ஆம் ஆண்டு வரை குத்­த­கைக்கு விடப்­பட்­டுள்ள அந்த நிலப்­ப­ரப்­பில் நான்கு மாடிக் கட்­ட­டம் அமைக்­க­லாம் என்று சிங்­கப்­பூர் நில ஆணை­யத்­தின் தக­வல்­கள் கூறு­கின்­றன.

அண்­மை­யில் அங்கு நிலம் திருத்­­தும் பணி இடம்­பெற்­ற­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது. கட்­டு­மா­னப் பணி­கள் நிறை­வ­டை­யும் தேதி இன்­னும் முடி­வா­க­வில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டது.