வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் வரம்புக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்படும்

2 mins read
b4c8e920-de89-4bdc-ae8d-16369e1413a0
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும். கோப்புப்படம் -

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் போக்கு­வ­ரத்­துக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் லாரி­களில் இனி வேகக் கட்­டுப்­பாட்­டைக் கண்­கா­ணிக்­கும் கரு­வி­கள் பொருத்­தப்­படும்.

அத்­து­டன் ஓட்­டு­நர் மிக­வும் களைப்­பா­கக் காணப்­பட்­டாலோ வாக­னத்­தைப் பாது­காப்­பற்ற முறை­யில் ஓட்­டி­னாலோ அவரை உடனே நிறுத்­து­வ­தற்கு ஒரு­வர் வாக­னத்­தில் இருக்க வேண்­டும்.

மேலும், வெளி­நாட்டு ஊழி­யர்­களை வாக­னத்­தில் ஓட்­டிச் செல்­லும் ஓட்­டு­நர்­க­ளுக்­குப் போது­மான ஓய்வு கிடைப்­பதை உறு­திப்­ப­டுத்­தும் பொருட்டு மனி­த­வள அமைச்சு புதிய விதி­மு­றை­களை அறி­மு­கப்­படுத்­த­வுள்­ளது.

தற்­போது ஒரு நாளில் 12 மணி நேரத்­திற்கு வேலை செய்­வது, மாதத்­திற்கு 72 மணி நேரம்­வரை கூடு­தல் நேரம் வேலை செய்­வது போன்ற வரம்­பு­கள் நடை­மு­றை­யில் உள்­ளன.

புதிய நடை­மு­றை­கள் குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று போக்கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் பேசி­னார். லாரி­களில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மேலும் பாது­காப்­பாக அழைத்­துச் செல்­லப்­ப­டு­வ­தைப் புதிய நடை­மு­றை­கள் உறு­திப்­ப­டுத்­து­வ­து­டன் அனைத்து ஊழி­யர்­க­ளை­யும் பேருந்து­களில் அழைத்துச் செல்­வ­தில் உள்ள சிர­மங்­க­ளை­யும் அவர் வலி­யு­றுத்­தி­னார். லாரி­களில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளை அழைத்துச் செல்­லும் நடை­மு­றையை முற்­றி­லும் அகற்ற முடி­யுமா என்று தஞ்­சோங் பகார் குழுத்­தொ­கு­தி­யைச் சேர்ந்த திரு மெல்­வின் யோங் மற்­றும் இதர ஆர்­வ­லர்­கள் கேட்ட கேள்­விக்கு அவர் இவ்­வாறு பதி­ல­ளித்­தி­ருந்­தார்.

மனி­த­வ­ளம், வேகக் கட்­டுப்­பாடு ஆகிய அம்­சங்­கள் தொடர்­பான புதிய சட்­டங்­க­ளைத் தவிர, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைக் கொண்டு செல்­லும் அனைத்து லாரி­க­ளி­லும் மழைக் காலத்­தில் நீர்ப்­புகா கித்தா துணி­கள் பொருத்­தப்­பட வேண்­டும் என்று டாக்­டர் கோ தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, உற்­பத்தி, கட்டு­மா­னம், கடல்­து­றைப் பிரி­வு­களில் உள்ள 280,000க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­க­ளின் போக்­கு­வ­ரத்­துக்­குப் போது­மான பேருந்­து­களும் ஓட்­டு­நர்­களும் இல்லை என்று தனி­யார் பேருந்து நடத்­து­நர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­தாக அறியப்படுகிறது.