சிங்கப்பூரின் சொந்த 'தெமாசெக் அரிசி' நெற்பயிர் அறுவடை; தெம்பனிஸ் செங்குத்து பண்ணையில் முதன்முதலாக கதிரடிப்பு

சிங்கப்பூரின் சொந்த 'தெமாசெக் அரிசி' நெற்பயிர் அறுவடை; தெம்பனிஸ் செங்குத்து பண்ணையில் முதன்முதலாக கதிரடிப்பு

2 mins read
11415959-28fc-4f1c-b2d8-76fdb62df8e7
(இடமிருந்து) போக்குவரத்து அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், சுகாதார, மனிதவள மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, தெம்பனிஸ் நகர மன்றத் தலைவி செங் லி ஹுய், வடகிழக்கு மாவட்ட மேயர் டெஸ்மண்ட் சூ ஆகியோர் தெமாசெக் அரிசி ரக நெற்பயிரை அறுவடை செய்து கதிரடித்து நெல்லை தனியாக எடுக்கிறார்கள்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரி­லேயே உருவாக்கப்பட்டு பயி­ரி­டப்­பட்ட 'தெமா­செக் அரிசி' என்ற நெற்­ப­யிர் முதன்­மு­றை­யாக அறு­வ­டை­யாகி இருக்­கிறது.

நாட்­டின் உண­வுத் தேவைக்கு ஏற்­ப­டக்­கூ­டிய மிரட்­ட­லைச் சமா­ளிக்க நடை­மு­றைக்கு வரும் முன்­னோ­டித் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக சிங்­கப்­பூர் தெமா­செக் அரிசி ரக நெல் விளைச்­சல் சாதிக்­கப்­பட்டு இருக்­கிறது.

தெம்­ப­னிஸ் அவென்யூ 5ல் உள்ள புளோக் 146ன் சுவர் நெடு­கி­லும் அமைக்­கப்­பட்டு உள்ள செங்­குத்­தான உயர் தொழில்­நுட்­பப் பண்­ணை­யில் பயி­ரி­டப்­பட்ட தெமா­செக் அரிசி ரகநெல் நேற்று அறு­வ­டை­யானது. இப்­போ­தைக்கு அந்த அரிசி தெமா­செக் உயி­ராய்­வி­யல் ஆய்­வகத்தின் ஆய்வு உரு­வாக்க நோக்­கத்­திற்­காக மட்­டுமே பயன்­படுத்­தப்­படும்.

நக­ரச் சூழ­லில் நெற்­ப­யி­ரைப் பயி­ரி­டும் விதம் பற்றி அந்த ஆய்­வகம் மேலும் பல ஆய்­வு­களை நடத்­தும். இந்த முன்­னோ­டித் திட்­டத்­திற்கு தெம்­ப­னிஸ் நகர மன்­ற­மும் தெமா­செக் அற­நி­று­வ­ன­மும் இந்த ஆய்­வ­க­மும் ஆத­ர­வ­ளிக்­கின்­றன. நெல் அறு­வ­டையை வர­வேற்­றுப் பேசிய தெம்­ப­னிஸ் நகர மன்­றத் தலை­வி­யான திரு­வாட்டி செங் லி ஹுய், சிங்­கப்­பூர் வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­ம­தியாகும் உணவுப் பொருள்களையே பெரி­தும் சார்ந்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

உண­வுப்­பொ­ருள்­கள் வரத்து பாதிக்­கக்­கூ­டிய மிரட்­டல் இருப்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார்.

தெமா­செக் நெல் ரகம் முத­லில் இந்த ஆய்­வ­கத்­தின் பசு­மைக் கூடங்­களில் விதையிடப்பட்டு நாற்று வளர்க்­கப்­பட்­டது. பிறகு சென்­ற­ஆண்டு அக்­டோ­ப­ரில் அந்த நாற்று­கள் புளோக் 146 செங்­குத்­துப் பண்ணை­யில் நடப்­பட்­டன.

இந்த ரக நெல் இந்­தோ­னீ­சி­யா­வில் 2016 முதல் வர்த்­தக நோக்­கத்­திற்­காக பயி­ர­டப்­படு­கிறது.

தெம்­ப­னிஸ் உயர் தொழில்­நுட்பப் பண்­ணை­யில் சொட்டு நீர்ப் பாசன முறை மூலம் பயி­ருக்குத் தண்­ணீர் கிடைக்­கிறது.

ஒரு வய­லில் ஒரு கிலோ அரி­சியை விளை­விக்க பொது­வாக 2,500 லிட்­டர் தண்­ணீர் தேவைப்­படும். ஆனால் சொட்டு நீர்ப் பாசன முறை மூலம் 750 லிட்­டர் தண்­ணீர் இருந்­தாலே போது­மா­னது என்று வல்­லு­நர் ஒரு­வர் குறிப்­பிட்­டார்.

தெமா­செக் நெல் ரகப் பயி­ருக்கு குறை­வான தண்­ணீரே போதும். இரண்டு வார காலம் கூட தண்ணீர் இல்­லா­மலே அது உயிர்­வாழ்ந்து­வி­டும். தெமா­செக் நெல்­ ர­கப் பயிர் ஒரு­பு­றம் இருக்க, தெம்­ப­னிஸ் பண்­ணை­யில் இதர கீரை வகை காய்­கறி­களும் பயி­ரா­கின்­றன.