அரசாங்க உதவி பெற 10ல் 9 சுயதொழில் புரிவோர் மெடிசேவ் கணக்கை நிரப்பினர்

2 mins read
66b36435-4e29-4471-9f9d-6e85cb0ac928
-

குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் சுய­தொ­ழில் செய்­வோர் அர­சாங்க உத­விக்­குத் தகு­தி­பெற வேண்­டு­மா­யின் அவர்­கள் தங்­க­ளது மெடி­சேவ் கணக்­கில் பணம் போடு­வது அவ­சி­யம். வேலை­ந­லன் வரு­மான உத­வித் திட்­டத்­தின்­கீழ் இதர தகு­தி­க­ளைப் பெற்­ற­வர்­கள் மத்­தி­யில் 10ல் ஒன்­பது சுய­தொ­ழில் புரி­வோர் அவ்­வாறு செய்­துள்­ள­னர். அவர்­க­ளின் மாதாந்­திர சரா­சரி வரு­மா­னம் $2,300 அல்­லது அதற்­குக் கீழ். இது வேலை ஆண்டு 2018ன் கணக்கு.

வேலை­ந­லன் வரு­மான உத­வித் திட்­டம் குறைந்த வரு­மா­னம் ஊழி­ய­ருக்­கும் சுய­தொ­ழில் புரி­வோ­ருக்­கும் உதவி செய்­கிறது. தகுதி பெறும் சுய­தொ­ழில் புரி­வோர் ஆண்­டுக்கு $2,667 வரை­யி­லான வேலை­ந­லன் வழங்­கீட்­டைப் பெற முடி­யும்.

குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் எல்லா ஊழி­யர்­களும் சுய­தொ­ழில் புரி­வோ­ரும் தங்­க­ளது மத்­திய சேம­நி­திக் கணக்­கில் பணம் செலுத்­து­வ­தன் மூலம் வேலை

­ந­லன் பலன்­களை அனு­ப­விக்க முடி­யும் என்று மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

"வேலை­ந­லன் என்­பது ஒரு நிரந்­த­ரத் திட்­டம் என்­ப­தால் இவ்­வாறு செய்­வது அவ­சி­யம். ஊழி­யர்­கள் தங்­க­ளது நீண்­ட­கால ஓய்­வுக்­கும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் தேவை­க­ளுக்­கும் சேமிக்க வேண்­டிய தனிப்­பட்ட பொறுப்­பைத் தொட­ரு­வதை இத்­திட்­டம் உறுதி செய்­கிறது. அதே­நே­ரம் அவர்­

க­ளுக்கு வேலை­ந­லன் மூலம் அர­சாங்க உத­வி­யும் கிடைக்­கிறது," என்­றார் திரு ஸாக்கி.

அல்­ஜு­னிட் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் லியோன் பெரேரா எழுப்­பிய வினா­வுக்கு அவர் பதி­ல­ளித்­தார். வேலை­ந­லன் வரு­மான உத­வித் திட்­டத்­திற்­குத் தகு­தி­பெ­றும் சுய­தொ­ழில் புரி­வோர் எத்­தனை பேர் என்­றும் மெடி­சேவ் கணக்­கில் பணம் செலுத்த இய­லா­தோர் எத்­தனை பேர் என்­றும் அவர் கேட்­டி­ருந்­தார்.