சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற ஐவர் கைது

1 mins read
46c6d181-e846-46bb-ab4b-aeeffcaa75f2
-

சட்­ட­வி­ரோ­த­மாக சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய முயன்ற, 21 முதல் 38 வய­துக்கு இடைப்­பட்ட ஆட­வர் ஐவர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

கட­லோ­ரக் காவல் படை­யின் கண்­கா­ணிப்பு அமைப்பு மூலம் அவர்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக போலிஸ் தெரி­வித்­தது. துவா­ஸ் கரையை நோக்கி சந்­தே­கப் பேர்­வழி­கள் ஐவர் நீந்தி வந்­த­தாக நம்பப்­ப­டு­கிறது. இதைத் தொடர்ந்து, கட­லோ­ரக் காவல் படை, ஜூரோங் போலிஸ் பிரிவு, கூர்க்கா படைப்­பி­ரிவு, சிறப்­புச் செயல்­பாட்­டுத் தள­பத்­தி­யம் ஆகி­ய­வற்­றின் அதி­கா­ரி­கள் நிகழ்­வி­டத்­திற்கு விரைந்து சென்று, குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அவர்­களைக் கைது செய்­தனர்.

பின்­னர் விசா­ர­ணைக்­காக குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­ அ­வர்­கள் குற்­ற­மி­ழைத்­தது உறுதி­யா­னால், ஆறு மாதம் வரை சிறை­யும் பிரம்­ப­டி­யும் விதிக்­கப்­படும்.