3 வயதில் சில்மிஷம், 9 வயதில் சீரழிப்பு: தந்தை மகளுக்குச் செய்த கொடுமை

3 வயதில் சில்மிஷம், 9 வயதில் சீரழிப்பு: தந்தை மகளுக்குச் செய்த கொடுமை

1 mins read
90df949b-4424-4d17-ae54-515225b1b682
-
Google News Preferred Icon

மனைவி வீட்டில் இல்லாதபோது தமது மகளை பல ஆண்டு காலமாக பாலியல் இச்சைக்கு ஆளாக்கி உள்ளார் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆடவர் ஒருவர். மூன்று வயதாக இருந்தபோது அக்குழந்தையிடம் பாலியல் சில்மிஷத்தைத் தொடங்கிய அவர், பிள்ளை 9 வயதாக வளர்ந்த பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். ஆபாச காணொளிகளை அவர் தமது மகளிடம் காட்டி வந்து உள்ளார். ஒரு குழந்தையும் அவரது தந்தையும் பாலியல் செய்கையில் ஈடுபடுவதைப் போன்ற ஒரு காணொளியும் அவற்றுள் ஒன்று. மகளோடு விளையாட வந்த 9 வயது சிறுமி ஒருவரையும் தமது வலை யில் வீழ்த்தினார் தற்போது 44 வயதாகும் அந்த ஆடவர். தமது மகளை பாலியல் பலாத் காரம் செய்தது தொடர்பிலான 3 குற்றச்சாட்டுகளை அவர் நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். மீண்டும் ஏப்ரல் 19ஆம் தேதி அவரிடம் விசா ரணை நடத்தப்படும். சிறுமியின் விவரங்களைக் காக்கும் பொருட்டு ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை. விவாக ரத்து பெற்றதால் இவர் தற்போது தமது மனைவியுடன் இல்லை.