மூதாட்டியைத் தாக்கிய இந்தோனீசிய பணிப்பெண்ணுக்கு 10 மாத சிறை

1 mins read

இந்­தோ­னீ­சி­யப் பணிப்­பெண் ணான 25 வயது முர்னி பனெங்சி தனது விரக்­தியை முத­லா­ளி­யின் நோய்­வாய்ப்­பட்ட தாயாரிடம் காட்டி அவர் மீது தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளார். இந்தக் குற்­றத்­திற்­காக முர்­னிக்கு 10 மாத சிறைத் தண் டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது நீதி­மன்றம். லெவண்டர் வட்­டா­ரத்­தில் உள்ள ஒரு வீட்டில் முர்னி தமது முத­லா­ளி­யின் தாயாரைத் தாக்கிய 15 குற்­றச்­சாட்­டு­களை ஒப்புக் கொண்டார். அவரது முதலாளியின் தாயா­ருக்கு வயது 96. அத்­து­டன், அந்த மூதாட்டிக்கு சிறுநீரக பாதிப்பு, நீரிழிவு நோய் போன்ற­வற்­று­டன் மறதி நோயும் இருந்த­தாக நீதி­மன்றத்­தில் தெரி விக்­கப்­பட்­டது.

அந்த மூதாட்­டியைக் கவ­னித்­துக்­கொள்வதற்­காக கடந்த 2013ஆம் ஆண்டு அந்தப் பணிப்­பெண் பணியில் அமர்த்­தப்­ பட்டதாக அர­சாங்க வழக்­க­றி­ஞர் நேற்று நீதி­மன்றத்­தில் தெரிவித் தார். பணிப்­பெண் தமது முதலாளி யின் தாயாரைப் பலமுறை தாக்­கி­யுள்­ளது கடந்த ஆண்டு செப்­டம்பர் 17ஆம் தேதி மூதாட்­டி­யின் மகள் அந்த வீட்டில் பொருத்­தப்­பட்­டி­ருந்த உள் கட்­டமைப்பு புகைப்­ப­டக் கருவியின் வழி தெரி­ய­வந்தது. பின்னர், இது தொடர்­பாக பணிப்­பெண்ணை விசா­ரித்த மூதாட்­டி­யின் மகள், அவர் பல முறை தமது தாயாரைத் தாக்கி யதை அறிந்தார். அதைத் தொடர்ந்து பணிப் பெண் மீது போலிசில் அவர் புகார் செய்தார். அந்தப் பணிப்­பெண் மூதாட் டியை தாக்­கு­வது தொடர்­பாக முதன்­மு­த­லில் 2014ஆம் ஆண்டு கண்­டிக்­கப்­பட்­டார். அப்­பொ­ழுது இதுபோல் இனி செய்யமாட்டேன் என்று அந்தப் பணிப்பெண் உறுதி அளித்­தார்.