சிங்கப்பூர் - சீனப் பிரதமர்கள் சந்திப்பு

சிங்கப்பூர் - சீனப் பிரதமர்கள் சந்திப்பு

1 mins read
b0a73557-d8ab-4600-8fe5-84eedab19698
பிரதமர் லாரன்ஸ் வோங்கும் சீனப் பிரதமர் லீ சியாங்கும் அக்டோபர் 11ஆம் தேதி இருதரப்புச் சந்திப்பில் கலந்துரையாடினர். - படம்: எஸ்பிஎச் மீடியா
Google News Preferred Icon

பிரதமர் லாரன்ஸ் வோங் சீனப் பிரதமர் லீ சியாங்குடன் அக்டோபர் 11ஆம் தேதி இருதரப்புச் சந்திப்பை நடத்தியுள்ளர்.

ஆசியான் கூட்டங்களுக்கு இடையில் அவர்கள் சந்தித்துப் பேசினர்.

மேம்படுத்தப்பட்ட ‘அனைத்தையும் உள்ளடக்கிய, உயர்தர, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட பங்காளித்துவம்’ மூலம் ஒத்துழைப்புகளை மேலும் வளர்ப்பது குறித்துத் தாங்கள் கலந்துரையாடியதாகப் பிரதமர் வோங் கூறினார்.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகால, ஆழமான நட்புறவு நிலவுகிறது.

சூச்சோ தொழிற்பூங்கா இந்த ஆண்டு 30ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. அடுத்த ஆண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவைக் குறிக்கும்.

தாம் இணைத் தலைவராகப் பொறுப்பு வகித்த ‘சிங்கப்பூர்-சீனா இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பே இருநாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட தளம் என்று பிரதமர் கூறினார்.

இரு நாட்டு மக்களுக்கும் நன்மையளிக்கும் நோக்கில் சீனாவுடன் மேலும் வலுவான உறவுகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பிரதமர்லாரன்ஸ் வோங்சீனாஇருதரப்பு உறவு