போக்குவரத்துக் காவல்துறையின் ஆணையரான டியோ சுன் சிங், இவ்வாண்டு ஜூன் 2ஆம் தேதிமுதல் சூதாட்ட கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாகியாக பணிமாற்றம் செய்யப்படுவார் என்று உள்துறை அமைச்சு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது சூதாட்ட கட்டுப்பாட்டு ஆணையத்தில் தலைமைப் பணியாற்றிவரும் திரு டியோ சுன் சிங்கிடம் இருந்து திரு டியோ பதவியை ஏற்றுக்கொள்வார்.
சூதாட்டக்கூட கட்டுப்பாட்டு ஆணையமாக இருந்த அமைப்பை சூதாட்ட கட்டுப்பாட்டு ஆணையமாக மாற்ற உதவி நற்சேவையாற்றிய 52 வயது திரு டியோவுக்கு உள்துறை அமைச்சு அதன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.
சிங்கப்பூரில் இடம்பெறும் அனைத்து சூதாட்ட நடவடிக்கைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் கடந்த 2022ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சின் துணை அமைப்பாக சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் நிறுவப்பட்டது.
அன்றுமுதல் பொதுவான சூதாட்ட அம்சம் பொருந்திய பொருள்களுடன் சூதாட்டக் கூடங்களும் ஆணையத்தின் கண்காணிப்புக்கு உட்பட்டவையாக விரிவாக்கம் கண்டன.
அவரது பதவிக் காலத்தில், ஆணையத்தின் மின்னியல் தரவுகள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், மீள்திறன், மேம்பட்ட பகுப்பாய்வு போன்ற பல மாற்றங்களுக்கு திரு டியோ தலைமை வகித்தார். சூதாட்டப் பழக்கத்தால் பாதிப்படைந்தோர், கள்ளப் பணப் பரிவர்த்தனைக் குற்றங்கள் ஆகியவற்றை நிர்வகிக்க அந்த நடவடிக்கைகள் உதவின.


