$3 பி. பணமோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆடம்பரப் பொருள்கள் கலைப்புக்காக ஒப்படைப்பு

$3 பி. பணமோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆடம்பரப் பொருள்கள் கலைப்புக்காக ஒப்படைப்பு

2 mins read
da1080a4-a8c1-4b07-ad0e-bfb647e27f88
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் படேக் பிலிப், ரிச்சர்ட் மில்லே கைக்கடிகாரங்கள், பல வைரங்கள் பதிக்கப்பட்ட நகைகள், ஹெர்ம்ஸ், லூயிஸ் உய்ட்டன் கைப்பைகள், 999 கிராம் முதல் 1 கிலோ வரை எடையுள்ள 50க்கும் மேற்பட்ட தங்கக் கட்டிகள் ஆகியவை அடங்கும். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

$3 பில்லியன் பணமோசடி வழக்கில் மொத்தம் 466 ஆடம்பரப் பொருள்களும் 58 தங்கக் கட்டிகளும் காவல்துறையினரால் தொழில்முறை சேவை நிறுவனமான டெலாய்ட்டிடம் நிர்வகிக்கவும் கலைக்கவும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் படேக் பிலிப், ரிச்சர்ட் மில்லே கைக்கடிகாரங்கள், பல வைரங்கள் பதிக்கப்பட்ட நகைகள், ஹெர்ம்ஸ், லூயிஸ் உய்ட்டன் கைப்பைகள், 999 கிராம் முதல் 1 கிலோ வரை எடையுள்ள 50க்கும் மேற்பட்ட தங்கக் கட்டிகள் ஆகியவை அடங்கும்.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பல சோதனைகளில் 10 வெளிநாட்டினர் பணமோசடி தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் இவையும் அடங்கும். மேலும் விசாரணையின்போது சிங்கப்பூரை விட்டு தப்பிச் சென்ற 17 சந்தேக நபர்களும் இதில் அடங்குவர்.

மீதமுள்ள அனைத்து ரொக்கமற்ற சொத்துகளையும் படிப்படியாக டெலாய்ட்டிடம் ஒப்படைத்து நிர்வகிக்கவும் கலைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், விசாரணையின்போது கார்கள், சொத்துகள், கலைப்பொருள்கள், கைக்கடிகாரங்கள், நகைகள், தங்கக் கட்டிகள், கைப்பைகள், மது பாட்டில்கள் உள்ளிட்ட சுமார் $1.25 பில்லியன் மதிப்புள்ள ரொக்கமற்ற சொத்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் அல்லது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர்.

54 சொத்துகள் உட்பட சில பொருள்கள் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கலைக்கப்பட்டன.

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) அன்று, மீதமுள்ள ரொக்கமற்ற சொத்துகளை நிர்வகிப்பதற்கும் கலைப்பதற்கும் டெலாய்ட் & டச் நிதி ஆலோசனை சேவைகள் நிறுவனத்தைக் காவல்துறை முறையாக நியமித்தது.

“இதை எளிதாக்கும் வகையில், இன்னும் கலைக்கப்படாத மீதமுள்ள அனைத்து ரொக்கமற்ற சொத்துகளையும் காவல்துறையினர் படிப்படியாக டெலாய்ட்டிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

“ஆகஸ்ட் 11 மற்றும் 12ஆம் தேதிக்கு இடையில், காவல்துறையினர் 466 ஆடம்பரப் பொருள்களையும் 58 தங்கக் கட்டிகளையும் டெலாய்ட்டிடம் ஒப்படைத்தனர்,” என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்