கிட்டத்தட்ட $480,000 கையாடல்: குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட முன்னாள் வழக்கறிஞர்

கிட்டத்தட்ட $480,000 கையாடல்: குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட முன்னாள் வழக்கறிஞர்

1 mins read
5e83bb19-24ac-46f7-b392-f2eaca57d688
மூன்று கட்சிகாரர்களின் பணத்தைக் கையாடல் செய்ததாக முன்னாள் மூத்த வழக்கறிஞரான குர்தாப் சிங் பாலா சிங் மீது குற்றம் சுமத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தனது மூன்று கட்சிகாரர்களின் பணத்தைக் கையாடல் செய்ததாக முன்னாள் மூத்த வழக்கறிஞரான குர்தாப் சிங் பாலா சிங் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 2011க்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் இந்தக் குற்றத்தைப் புரிந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அவர் ‘குர்தாயிப் சியோங் & பார்ட்னர்ஸ்’ என்னும் நிறு­வ­னத்­தின் வழக்கறி­ஞ­ரா­க­ இருந்­தார்.

2018ஆம் ஆண்டு வழக்கறிஞராக செயல்பட அவருக்குத் தடைவிதிக்கப்பட்டது.இருப்பினும் அவர் அடுத்த ஆண்டே ஒருவருக்கு வழக்கறிஞராகச் செயல்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

70 வயதான சிங், தன் மீது கிட்டத்தட்ட $459,000 நம்பிக்கை மோசடி செய்ததாக சுமத்தப்பட்டிருந்த இரண்டுக் குற்றச்சாட்டையும் சட்டத்தொழில் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட ஒரு குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.

மூன்றாவது குற்றச்சாட்டு $21,000 நம்பிக்கை மோசடி செய்தது. இந்தக் குற்றச்சாட்டு தண்டனையின் போது பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கிற்கானத் தீர்ப்பு ஆகஸ்ட் 24ஆம் தேதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
வழக்கறிஞர்குற்றச்சாட்டுதண்டனை