ரகசியக் கும்பலுடன் தொடர்பு: 13 ஆடவர்கள் கைது

1 mins read
dc587df9-1412-4cd7-9389-1fbe4a65ebbf
நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் முழுவதும் அதிகாரிகள் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் சந்தேக நபர்கள் சிக்கினர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சிங்கப்பூரில் சட்டவிரோதமாகச் செயல்படும் ரகசியக் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின்பேரில் 13 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 21 - 39 வயதிற்குட்பட்டவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் முழுவதும் அதிகாரிகள் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் சந்தேகப் பேர்வழிகள் சிக்கினர்.

ஏறத்தாழ 40 பொழுதுபோக்கு இடங்கள், இரவுக் கேளிக்கை விடுதிகள், உணவு, பானக் கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கிட்டத்தட்ட 100 பேரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.

சந்தேகப் பேர்வழிகளின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்