கண்ணதாசன் விழா: நாள் முழுவதும் நடந்தேறியது

கண்ணதாசன் விழா: நாள் முழுவதும் நடந்தேறியது

2 mins read
b0df6b23-05e2-4331-b55c-a39e72f5a64c
-
Google News Preferred Icon

பல்லாயிரக்கணக்கான கவிதை கள், திரைப்படப் பாடல்களை எழுதி, தமிழ் மக்களின் நெஞ் சத்தில் நீங்கா இடம்பிடித்த கவியரசர் கண்ணதாசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. பிரபல எழுத்தாளருமான கண்ணதாசனின் மாபெரும் படைப்புகளை நினைவுகூர்ந்து அவற்றைப் போற்றும் விதமாக அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் மண்டபத்தில் நாள் முழுதும் பல சுவாரஸ்ய நிகழ்ச்சி கள் இடம்பெற்றன. கண்ணதாசனைப் பற்றிய கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், சிறுவர் முதல் பெரிய வர்களுக்கான பாட்டுத்திறன் போட்டியின் இறுதிச் சுற்று, தமிழ் எழுதுவதில் உன்னதம் அடைந்த இளம் சிங்கப்பூரருக்கான உயரிய கண்ணதாசன் விருது போன்ற அங்கங்கள் நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தன. தமிழகத்திலிருந்து வருகை தந்த பிரபல பேச்சாளர்களான பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம், முனைவர் சரஸ்வதி இராமநாதன், கவியரசரின் புதல்வரான திரு அண்ணாதுரை கண்ணதாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மலேசியாவின் இளையர், விளையாட்டுத்துறை துணை அமைச்சரும் மலேசிய கண்ண தாசன் அறவாரியத்தின் தலை வருமான எம்.சரவணன், இந்து சுதாஸகி ராமன் பாரம்பரிய இந்தியக் கலைகளில் ஒன்றான பரதநாட்டியத்தை சிங்கப்பூர் சூழலுக்கு ஏற்ப மாணவர்களுக்கு எவ்வாறு கற்றுக்கொடுக்கலாம் என்பதை ஆராய்ந்து வருகிறார் நடன மணியும் நடன ஆசிரியருமான திருமதி துர்கா மணிமாறன், 38. கடந்த 19 ஆண்டுகளாக நடனம் கற்பித்து வரும் அவர், பரத நாட்டியத்தைப் பற்றியும் நடன மணிகளைப் பற்றியும் 'பரம்பரா' என்ற ஒரு நிகழ்ச்சியில் விளக்க உள்ளார். நாட்டிய நாடகம், கண்காட்சி, கலந்துரையாடல் ஆகிய அங்கங்கள் நிகழ்ச்சியில் இடம்பெறும்.

இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் நடனப் பயிற்சியைக் கற்றுள்ள அவர், தாம் கற்றுக் கொண்ட முறை இக்காலச் சிறுவர்கள் அக்கலையைக் கற்றுக் கொள்ளும் விதத்திலிருந்து மாறு பட்டு உள்ளதைச் சுட்டினார். "அந்தக் காலத்தில் குறிப்புகள் எடுத்து கற்றுக்கொண்டோம். ஆனால், இன்றோ சிறுவர்கள் வகுப்புகளில் ஆசிரியர்களை 'ஐபேட்' மூலம் காணொளி எடுத்துக்கொண்டு நடனத்தைக் கண்ணதாசன் விழா: நாள் முழுவதும் நடந்தேறியது அறக்கட்டளை வாரியத்தின் துணைத் தலைவரும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரு மான ஆர்.தினகரன் ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர் களாகக் கலந்துகொண்டனர். மதுரை பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் தலைமை தாங்கிய கவியரங்கில் கண்ணதா சனின் 'பாட வைக்கும் பாடல் வரிகள்' அங்கம் அரங்கேறியது. பேராசிரியை முனைவர் சரஸ்வதி இராமநாதன் முன்னிலை வகித்த கருத்தரங்கில் 'கண்ணதாசன் படைப்புகளில் சமூகப் பார்வை' என்ற தலைப்பையொட்டி கல்வி அமைச்சின் சிங்கப்பூர் ஆசிரியர் கலைக்கழகத்தில் தமிழ்மொழிக் கான தலைமை முதன்மை ஆசிரியரான திரு ஜெயராஜதாஸ் பாண்டியன் உரையாற்றினார்.

(இடமிருந்து வலம்) சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு நா.ஆண்டியப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆர்.தினகரன், விருது பெறும் எழுத்தாளர் எம்.கே.குமார், கழகத்தின் செயலாளர் திரு சுப.அருணாசலம். படம்: நாதன் ஸ்டூடியோஸ்