வயநாடு நிலச்சரிவு: காணாமற்போனோரை உயிரிழந்ததாக அறிவிக்க கேரளா முடிவு

வயநாடு நிலச்சரிவு: காணாமற்போனோரை உயிரிழந்ததாக அறிவிக்க கேரளா முடிவு

1 mins read
348371f7-c7d1-4609-ac9c-a111505a783a
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்ட பேரிடர் மீட்புப் படையினர். - படம்: பிடிஐ
Google News Preferred Icon

வயநாடு: கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போனவர்களை உயிரிழந்ததாக அறிவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 263 பேர் உயிரிழந்ததனர் என்றும் 35 பேரைக் காணவில்லை என்றும் அரசு ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், காணாமல் போனவர்களை உயிரிழந்துவிட்டதாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் காணாமல் போனவர்களுடைய குடும்பத்தினருக்கு நிவாரண உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்