தேர்தல் முடிந்ததும் அதிர்ச்சி அறிவிப்பு: நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

1 mins read
81e0c1b4-04db-443f-8781-39c42ffa072d
கோப்புப் படம் - ஊடகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட பிரசாரமும் வாக்களிப்பும் முடிந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

கட்டணம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதேபோல், மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்கிறது.

வழக்கம்போல் ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வரவேண்டிய கட்டண உயர்வு, தேர்தலை ஒட்டி இரண்டு மாதங்களுக்குப்பிறகு அமலுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்