புதிய தலைமை நீதிபதியின்கீழ் குடிமக்கள் உரிமைகள் குறித்த எதிர்பார்ப்பு

2 mins read
3118b615-c163-415f-bb79-40528984c936
தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட். படம்: ஊடகம் -

புதுடெல்லி: இம்மாதம் 9ஆம் தேதி இந்­தி­யா­வின் 50வது தலைமை நீதி­ப­தி­யாக நீதி­பதி தனஞ்­சய யஷ்­வந்த் சந்­தி­ர­சூட் பத­வி­யேற்­ற­தைத் தொடர்ந்து, உல­கின் மிகப்­பெ­ரிய ஜன­நா­ய­கத்­தின் நீதித்­துறை இப்­போது மிக­வும் நேர்மையான குணம் கொண்ட ஒரு­வ­ரால் வழி­ந­டத்­தப்­பட உள்­ளது.

அறி­வார்ந்­த­வ­ரா­க­வும் தொழில்­நுட்­பத்­தில் ஆர்­வம் கொண்­ட­வ­ரா­க­வும் அறி­யப்­படும் தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட், 63, மனித உரி­மை­களை­யும் ஓரங்­கட்­டப்­பட்ட சமூ­கங்­க­ளை­யும் ஆத­ரிக்­கக் கூடி­ய­வர்.

தன் இரண்டாண்டு பத­விக் காலத்­தில் நாடா­ளு­மன்­றம், அர­சி­ய­ ல­மைப்­புக்கு முர­ணான எந்தவொரு கொள்­கை­க்­கும் ­நீதி­பதி சந்­தி­ர­சூட் சவா­லாக விளங்­கு­வார் என்ற எதிர்பார்ப்பு ஆர்­வ­லர்­கள், சட்ட வல்­லு­நர்­கள் மத்தியில் நிலவுகிறது.

மென்­மை­யா­கப் பேசும் இயல்பு கொண்ட இவர், பல சந்­தர்ப்­பங்­களில் உச்ச நீதி­மன்ற அமர்­வு­களில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஆத­ர­வாக அவர்­க­ளது தனிப்­பட்ட உரி­மை­களுக்­கான தீர்ப்­பு­களில் பக்­க­து­ணை­யாக நின்றுள்ளார்.

உதா­ர­ண­மாக, இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட ஆதார் சட்­டம் அர­ச­மைப்­புச் சட்­டப்­படி செல்­லத்­தக்­கதா என்ற வழக்­கில், ஐந்து நீதி­ப­தி­கள் கொண்ட அமர்­வில் நீதி­பதி சந்­தி­ர­சூட் கருத்து மட்­டுமே மாறு­பட்டிருந்­தது.

ஆதார் சட்­டத்தை நிதி மசோ­தா­வாக நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றி­யது 'தந்­தி­ரம்' என்­றும் அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரா­னது என்­றும் அவர் தமது தீர்ப்­பில் வர்­ணித்­தார்.

பெரும்­பான்மை நீதி­ப­தி­க­ளின் தீர்ப்பே இறுதியானது என்­றா­லும், சந்­தி­ர­சூட் வழங்­கிய தீர்ப்பு முக்­கி­ய­மா­கக் கவ­னிக்­கப்­பட்­டது.

2018ஆம் ஆண்டு தீர்ப்­பில், கடு­மை­யான பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டங்­க­ளின் கீழ் கைது செய்­யப்­பட்ட ஐந்து ஆர்­வ­லர்­க­ளுக்­குச் சாதகமாக தீர்ப்பு வழங்கினார்.

"நீதி­பதி சந்­தி­ர­சூட்­டின் சாதனை என்­ன­வெனில், அவர் எப்­போ­தும் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளின் அவ­ல­நி­லையை உணர்ந்து தனி­மனித சுதந்­தி­ரத்தைப் போற்றுப­வர்" என்று உச்ச நீதி­மன்­ற மூத்த வழக்­கறி­ஞர் துஷ்­யந்த் தவே கூறி­னார்.

கேர­ளா­வில் உள்ள சப­ரி­மலை கோவி­லுக்­குள் நுழை­யும் பெண்­களின் உரிமை தொடர்­பான வழக்­கில், "10 முதல் 50 வயது வரை­யி­லான பெண்­களை விலக்­கி வைப் பது அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்தை மீறு­வ­தா­கும்" என்று நீதி­பதி குறிப் பிட்டிருந்தார்.

மத­ரீ­தியில், பார­பட்­ச­மானது என்று வர்ணிக்கப்படும் குடி­யு­ரி­மைத் திருத்தச் சட்­டம், காஷ்­மீ­ரின் சுயாட்சி, அர­சி­யல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நிதி­யில் வெளிப் ­ப­டைத்­தன்மை பற்­றிய வழக்­கு­களை நீதி­பதி எவ்­வாறு கையாள்­வார் என்­ப­தில்­தான் அனைத்து மக்­க­ளின் பார்­வை­யும் உள்­ளது.

தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட் 1.3 பில்­லி­யன் மக்­க­ளுக்குச் சேவை செய்­யும் நீதித்­து­றை­யில் பெரும் நிர்­வாகச் சவால்­களைச் சமா­ளிக்­க­வேண்­டும். இதில் இந்­திய நீதி­மன்­றங்­களில் நிலு­வை­யில் உள்ள 45 மில்­லி­யன் வழக்­கு­களும் அடங்­கும்.

நீதி­பதி சந்­தி­ர­சூட் மும்­பை­யில் வளர்ந்து, டெல்லி பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சட்­டம் பயின்­று, ஹார்­வர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சட்டத் துறை யில் முனை­வர் பட்­டமும் பெற்­ற­வர்.

அவ­ருக்கு இரண்டு மகன்­கள் உள்­ள­னர். இரு­வ­ரும் வழக்­க­றி­ஞர்­கள். அவ­ரது முதல் மனைவி 2007ல் புற்­று­நோ­யால் இறந்­தார். இப்­போது வழக்கறிஞரும் தன் இரண்டாவது மனைவியுமான கல்­பனா தாசுடன் சிறப்­புத் தேவை­கள் கொண்ட இரு மகள்­களை வளர்த்து வரு­கி­றார்.