இந்தியாவின் செயல் வர்த்தக நம்பிக்கையை பாதிக்கிறது: சீனா

இந்தியாவின் செயல் வர்த்தக நம்பிக்கையை பாதிக்கிறது: சீனா

2 mins read
2c71428c-842e-47a7-b7d3-cfb82155c37f
பாலியில் சீன அமைச்சர் வாங் யியைச் சந்தித்த இந்திய அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர். படம்: இந்திய ஊடகம் -
Google News Preferred Icon

மும்பை: இந்­தி­யா­வில் உள்ள சீன நிறு­வ­னங்­கள் மீது அம­லாக்க அமைப்­பு­கள் அடிக்­கடி விசா­ரணை நடத்­து­வது அந்­நாட்­டின் மீதான வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளின் வர்த்­தக நம்­பிக்­கையை பாதிக்­கிறது என்று சீன தூத­ர­கம் குற்­றம் சாட்­டி­யுள்­ளது.

கடந்த 2020ல் எல்லை மோத­லைத் தொடர்ந்து இரு நாடு­க­ளுக்கு இடையே அர­சி­யல் பதற்­றம் ஏற்­பட்­டது. அப்­போ­தி­லி­ருந்து பல சீன நிறு­வ­னங்­கள் வர்த்­த­கம் ெசய்ய சிர­மப்­ப­டு­கின்­றன.

மேலும் பாது­காப்பு அம்­சங்­களை சுட்­டிக்­காட்டி 300க்கும் மேற்­பட்ட சீனா­வின் கைபேசி செய­லி­க­ளுக்கு இந்­தியா தடை விதித்­தது.

சீனா­வின் முத­லீ­டு­க­ளுக்­கான விதி­மு­றை­களும் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

அண்­மை­யில் சீனா­வின் பிபிகே எல்க்ட்­ரா­னிக்ஸ் நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான திறன்­பேசி தயா­ரிப்பு விவோ நிறு­வ­னத்­தி­டம் நிதி மோசடி தொடர்­பில் இந்­திய அம­லாக்க அதி­கா­ரி­கள் விசா­ரித்­த­தா­கக் கூறப்­ ப­டு­கிறது.

இதை­ய­டுத்து தூத­ர­கத்­தின் கருத்து வெளி­யா­கி­யுள்­ளது.

இத்­த­கைய விசா­ர­ணை­கள் இந்­தி­யா­வின் வர்த்­த­கங்­க­ளுக்­கான சூழ்­நி­லை­கள் மேம்­ப­டு­வ­தற்­குத் தடை­யாக உள்­ளது. சீன நிறு­வ­னங்­கள் உட்­பட மற்ற நாடு­களில் உள்ள நிறு­வ­னங்­கள் இந்­தி­யா­வில் செயல்­ப­டு­வ­தற்­கும் தடை­யாக உள்­ளது என்று தூத­க­ரத்­தின் அறிக்கை குறிப்­பிட்­டது.

இந்த நிலை­யில் ஜி-20 வெளி­யு­றவு அமைச்­சர்­கள் மாநாட்­டில் பங்­கேற்­ப­தற்­ப­காக இந்­தோ­னீ­சி­யா­வின் பாலித் தீவுக்­குச் சென்­றுள்ள இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ். ஜெய்­சங்­கர் அங்கு சீன வெளி­யு­றவு அமைச்­சர் வாங் யியைச் சந்­தித்­துப் பேசி­யுள்­ளார்.

சீனா­வின் வெளி­யு­றவு அமைச்­சர் வாங் யி சந்­திப்­பு­டன் பாலி­யில் என்­னு­டைய நாள் தொடங்­கி­யி­ருக்­கிறது என்று திரு ஜெய்­சங்­கர் டுவிட்­டரில் இது பற்றி குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இரு­வ­ருக்­கும் இடை­யி­லான சந்­திப்பு ஒரு மணி நேரத்­துக்கு மேல் நீடித்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

முன்­ன­தாக சீனா­வு­டன் எல்­லைப் பூசல் உள்­ளிட்ட எல்­லாப் பிரச்­சி­னை­க­ளுக்­கும் தீர்வு காணப்­பட வேண்­டும் என்று அமைச்­சர் ஜெய்­சங்­கர் அழைப்பு விடுத்­த­தாக இந்­திய வெளி­யு­றவு அமைச்சு கூறி­யது.