ஒரு மில்லியன் வங்கி ஊழியர்கள் போராட்டம்

1 mins read
2408b977-a7ff-404f-be6b-efbabe7b57c5
அகமதாபாத்தில் நடைபெற்ற போராட்டம். படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: பொதுத்­துறை வங்­கி­கள் தனி­யார் மய­மாக்­கப்­ப­டு­வ­தற்கு வங்கி ஊழி­யர்­கள் மத்­தி­யில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.

இதைப் பதிவு செய்­­யும் வித­மாக நாடு முழு­வ­தும் உள்ள சுமார் ஒரு மில்­லி­யன் வங்கி ஊழி­யர்­கள் நேற்று வேலை நிறுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இந்­தப் போராட்­டம் கார­ண­மாக நாடு முழு­வ­தும் உள்ள ஆயி­ரக்­க­ணக்­கான வங்­கிக் கிளை­களில் பணி­கள் முடங்­கின.

வங்கி சேவை­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் பொது­மக்­கள், வணி­கர்­கள், தொழி­ல­தி­பர்­கள் உள்­ளிட்ட அனை­வ­ரும் கடும் சிர­மங்­களை எதிர்­கொண்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த பிப்­ர­வரி மாதம் மத்­திய அரசு தாக்­கல் செய்த நிதி­நிலை அறிக்­கை­யில் பொதுத்­துறை வங்கி­களை தனி­யார்­ம­ய­மாக்­கு­வது குறித்த அறி­விப்பு வெளி­யாகி இருந்­தது. இந்­நி­லை­யில், இரண்டு வங்கி­களை தனி­யார்­ம­ய­மாக்­கும் முதல்­கட்ட நட­வ­டிக்­கை­கள் தொடங்கி உள்­ளன. இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து வங்கி ஊழி­யர்­கள் இரண்டு நாள் வேலை நிறுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.