இந்திய எல்லையில் பதற்றம்: பாகிஸ்தான் படைகள் குவிப்பு

இந்திய எல்லையில் பதற்றம்: பாகிஸ்தான் படைகள் குவிப்பு

1 mins read
Google News Preferred Icon

இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது. 190 கிமீ. நீளத்துக்கான இந்த எல்லையின் பாகிஸ்தான் பகுதியில் பொதுவாக சுற்றுக்காவல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்குப் பதிலாக தற்போது ராணுவ வீரர்கள் குவிக்கப் பட்டுள்ளனர். இந்த மாற்றத்தை இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை கண்டுபிடித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் அப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் வீரர்களையும் ஆயுதங் களையும் கொண்டுவந்து குவிப்பதாக இந்திய அரசாங்கமும் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரிகளும் உறுதிபடக் கூறியுள்ளனர்.