ரூ.45 லட்சம் பெற்று ஏமாற்றினார்: அமைச்சர் மீது பண மோசடிப் புகார்

ரூ.45 லட்சம் பெற்று ஏமாற்றினார்: அமைச்சர் மீது பண மோசடிப் புகார்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: அமைச்சர் காமராஜ் தம்மிடம் ரூ.45 லட்சம் பெற்றதாகவும் கடந்த 5 ஆண்டுகளாக அப்பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாகவும் திருவாரூரைச் சேர்ந்த குமார் என்பவர் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று காமராஜ் அமைச்சராக பொறுப்பேற்கும்போது பதவியேற்பு விழா நடக்கும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். "சட்டப்பேரவைத் தேர்தலில் நன்னிலம் தொகுதியில் அவரை எதிர்த்து நான் வேட்புமனுத் தாக்கல் செய்தேன். ஆனால் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி எனது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வைத்துவிட்டார். தேர்தல் முடிவு வெளியான மறுநாள் முழுத் தொகையையும் திருப்பி அளிப்பதாக அவரின் நண்பர்கள் மூலம் தகவல் தெரிவித்தார். ஆனால் இன்னும் எனக்குப் பணம் கிடைக்கவில்லை," என்கிறார் குமார்.