கனமழையால் கோவை, நீலகிரியில் சிவப்பு எச்சரிக்கை நிலை

கனமழையால் கோவை, நீலகிரியில் சிவப்பு எச்சரிக்கை நிலை

1 mins read
31248667-1aa1-4609-9e88-4a933b207280
தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்யாக்குமரி மாவட்டங்களிலுள்ள குறிப்பிட்ட சில இடங்களில் மழைப்பொழிவு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: இணையம்
Google News Preferred Icon

தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர் பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மழை கூடுதலாகப் பெய்யும் என்று தமிழகத்தின் வானிலை ஆய்வகம் குறிப்பிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இந்த வாரத்தின் முற்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளுக்கும் போக்குவரத்து இடர்ப்பாடுகளுக்கும் அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்புநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களிலுள்ள குறிப்பிட்ட சில இடங்களில் மழைப்பொழிவு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடுவட்டத்திற்கு அருகில் மண்ணின் நகர்வால் ஊட்டி குடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இரண்டு பாறைக்கற்கள் எந்நேரமும் நெடுஞ்சாலையில் உருண்டோடலாம் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா எச்சரித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அந்தச் சாலை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது. அரசாங்கப் பேருந்துகள் அதில் பகல் நேரத்தில் மட்டும் இயங்குவதற்கு அனுமதி உள்ளது. அவசரச் சேவைகளும் இயங்குவதற்கு அனுமதி உள்ளது.

இதற்கிடையே, கனமழையால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுக்க தேசிய விரைவுச்சாலைகள் மற்றும் வனவிலங்கு துறையும் இணைந்து செயல்படத் திட்டமிடுகின்றன.

குறிப்புச் சொற்கள்