‘ஏஐ’ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆடையைக் களைந்து போராட்டம்

‘ஏஐ’ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆடையைக் களைந்து போராட்டம்

2 mins read
6d0c3b63-e1c6-4299-a6fa-1a319241b5ec
போராட்​டத்​தில் ஈடு​பட்ட காங்​கிரஸ் தொண்​டர்​களை காவல்துறையினர் கைது செய்து மாநாட்​டிலிருந்து அப்​புறப்​படுத்​தினர். - படம்: இந்து தமிழ்திசை

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்​லி​யில் நடை​பெற்ற செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மாநாட்​டின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) காங்​கிரஸ் தொண்​டர்​கள் மேலாடையைக் களைந்து போராட்​டம் நடத்​தினர்.

கடந்த 16ஆம் தேதி மாநாடு தொடங்​கியது. அந்த மாநாடு ஒட்​டுமொத்த உலகத்​தின் கவனத்​தை​யும் ஈர்த்தது.

இந்த சூழலில் வெள்ளிக்கிழமை இளைஞர் காங்​கிரசைச் சேர்ந்த சிலர் அரங்​கம் ஐந்தில் திடீரென நுழைந்​தனர். அவர்கள் பிரதமர் நரேந்​திர மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் படங்​கள் அச்​சிடப்​பட்ட மேலாடைகளை அணிந்​திருந்​தனர்.

அந்த ஆடையில் இந்​திய-அமெரிக்க வர்த்தக ஒப்​பந்​தம், எப்​ஸ்​டீன் கோப்புகள் உள்ளிட்ட வாசகங்​கள் இருந்தன.

சில நிமிடங்களில் அவர்கள் ஆடையைக் களைந்து பிரதமர் மோடிக்கு எதி​ராக​வும் இந்​திய - அமெரிக்க வர்த்தக ஒப்​பந்​தத்​துக்கு எதி​ராக​வும் முழக்கமிட்டனர்.

போராட்​டத்​தில் ஈடு​பட்ட காங்​கிரஸ் தொண்​டர்​களை காவல்துறையினர் கைது செய்து அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தினர். பின்​னர் அவர்​கள் விடுவிக்​கப்​பட்​டனர்.

போராட்​டத்தை முன்​னின்று நடத்​திய ஐந்து பேரிடம் மட்​டும் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

‘‘மாநாடு நடை​பெறும் பாரத் மண்​டபத்​துக்​குள் நுழைய ‘கியூஆர்’ குறியீடு கொண்ட அனுமதி தேவை. காங்​கிரஸ் தொண்​டர்​கள் எவ்​வாறு பாரத் மண்​டபத்​துக்​குள் நுழைந்​தார்​கள் என்​பது குறித்து விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது,’’ என்று டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாஜக கண்​டனம்

இந்நிலையில், காங்கிரஸ் தொண்டர்களின் நடவடிக்கைக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“இந்​தி​யா​வின் புகழுக்குக் களங்​கம் ஏற்​படுத்​தும் வகை​யில் காங்​கிரஸ் தொண்​டர்​கள் ஏஐ மாநாட்​டில் போராட்​டம் நடத்தி உள்​ளனர். அவர்​களது நடவடிக்​கையை இந்​தியா மட்​டுமல்ல, ஒட்​டுமொத்த உலக​மும் பார்த்​தது,’’ என்று தற்காப்பு அமைச்சர் ராஜ்​நாத் சிங் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் மத்​திய அமைச்​சர்கள் கிரண் ரிஜிஜு, சிவ​ராஜ் சிங் சௌகான் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலாடை இன்றிப் போ​ராட்​டம் நடத்​திய காங்​கிரஸ் தொண்​டர்​களைப் பொது​மக்​கள் சிலர்​ அடித்​து விரட்​டிய காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்