முழுமையான, உடனடிப் போர் நிறுத்தம்: இந்தியாவும் பாகிஸ்தானும் இணக்கம்

முழுமையான, உடனடிப் போர் நிறுத்தம்: இந்தியாவும் பாகிஸ்தானும் இணக்கம்

1 mins read
a6beab49-4ea1-4eca-8bc9-86b9cdbec960
மே 8ஆம் தேதி இந்தியாவின் பூஞ்ச் நகரில் சேதமுற்ற குருத்வாரா (சீக்கியர்களின் ஆலயம்) ஒன்றைப் பார்வையிடும் குடியிருப்பாளர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான, உடனடிப் போர் நிறுத்தத்திற்கு இணங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமை (மே 10) தமது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்கா இரவு முழுவதும் மேற்கொண்ட சமரசப் பேச்சைத் தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு இணங்கியிருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நியாயமாகச் சிந்தித்து நடைமுறை அறிவோடு முடிவெடுத்த இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள். இந்த விவகாரத்தில் நீங்கள் செலுத்திய கவனத்திற்கு நன்றி!” என்று திரு டிரம்ப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பாகிஸ்தான்இந்தியாபோர்அமெரிக்காஅதிபர்டோனல்ட் டிரம்ப்சண்டை நிறுத்தம்