வாட்டப்போகும் குளிர்காலம்; துணிவுடன் எதிர்கொள்ளத் தயாராகும் இந்திய ராணுவம்

வாட்டப்போகும் குளிர்காலம்; துணிவுடன் எதிர்கொள்ளத் தயாராகும் இந்திய ராணுவம்

2 mins read
856ef4af-d157-4d90-b306-af57523ef8ce
வழக்கமாக, குளிர்காலத்தின்போது இந்திய எல்லை வழியாக ஊடுருவல் நடவடிக்கைகளை மேற்கொள்வது பயங்கரவாத இயக்கங்களின் வழக்கமாக உள்ளது.  - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

ஸ்ரீநகர்: கடுங் குளிரையும் பயங்கரவாதத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.

அசல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே மீண்டும் தனது துடுப்புகளை இந்தியா குவித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, லடாக் பகுதியில் இந்திய ராணுவம் கடுங் குளிரை எதிர்நோக்கி உள்ளது.

லடாக்கின் டெப்சாங், டெம்சோக் எல்லைப் பகுதிகளில் இந்திய, பாகிஸ்தான் ராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையேயான ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படும் என இருதரப்பும் உறுதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.

வழக்கமாக, குளிர்காலத்தின்போது இந்திய எல்லை வழியாக ஊடுருவல் நடவடிக்கைகளை மேற்கொள்வது பயங்கரவாத இயக்கங்களின் வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு ஏறக்குறைய 200 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ தயார்நிலையில் இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், படைகளைக் குவித்து வரும் நடவடிக்கை காரணமாக, லடாக்கில் உயரமான இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வீரர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்தியா, சீனா இடையிலான எல்லை மோதலின் தீவிரம் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் இருதரப்பும் இன்னும் தங்கள் படைகளை முழுமையாக திரும்பப் பெறவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக எல்லைப் பகுதியில் குளிர்காலங்களில் படைக்குவிப்பு நடவடிக்கை நீடித்து வருவதை ஊடகச் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

‘ஆப்பரேஷன் சிந்தூர்’, ‘ஆப்பரேஷன் பிம்பிள்’ உள்ளிட்ட நடவடிக்கைகள் நீடிப்பதாக இந்திய ராணுவம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், இருதரப்பு இடையே மோதல்களைத் தவிர்க்க அனைத்து மட்டங்களிலும் உள்ள தளபதிகளின் தொடர்ச்சியான நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் மற்றும் கடுமையான கட்டுப்பாட்டிற்குப் பிறகு இப்பகுதியில் அமைதி ஏற்பட்டது.

இந்த ஆண்டு சீனாவுடனான அசல் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் எத்தகைய மோதல் சம்பவமும் பதிவாகவில்லை.

எனினும், எல்லைப் பகுதியில் குளிர்காலம் முழுவதும், நவீன கண்காணிப்புக் கருவிகளின் உதவியுடன் சுற்றுக்காவல் மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.

பெரிய ‘டிரோன்’கள், ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைக்கு வலுசேர்க்கப்படும் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்